அச்சப் பத்து

விக்கிநூல்கள் இலிருந்து

புற்றிள்வாள் அரவும் அஞ்சேன் பொய்யர்தம் மெய்யும் அஞ்சேன்

கற்றைவார் சடைஎம் அண்ணல் கண்ணுதல் பாதம் நண்ணி

மற்றும்ஓர் தெய்வந் தன்னை உண்டென நினைந்தெம் பெம்மாற்கு

அற்றிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 4


அச்சப் பத்து/உரை 1-4


வெருவரேன் வேட்கை வந்தால் வினைக்கடல் கொளினும் அஞ்சேன்

இருவரால் மாறு காணா எம்பிரான் தம்பிரா னாம்

திருவுரு அன்றி மற்றோர் தேவரெத் தேவ ரென்ன

அருவரா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 8


அச்சப் பத்து/உரை 5-8


வன்புலால் வேலும் அஞ்சேன் வளைக்கையார் கடைக்கண் அஞ்சேன்

என்பெலாம் உருக நோக்கி அம்பலத் தாடுகின்ற

என்பொலா மணியை ஏத்தி இனிதருள் பருக மாட்டா

அன்பிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 12


அச்சப் பத்து/உரை 9-12


கிளியனார் கிளவி அஞ்சேன் அவர்கிறி முறுவல் அஞ்சேன்

வெளியநீ றாடும் மேனி வேதியன் பாதம் நண்ணித்

துளியுலாம் கண்ணராகித் தொழுதழு துள்ளம் நெக்கிங்கு

அளியிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 16


அச்சப் பத்து/உரை 13-16


பிணியெலாம் வரினும் அஞ்சேன் பிறப்பினோ டிறப்பும் அஞ்சேன்

துணிநிலா அணியினான்தன் தொழும்பரோடழுந்தி அம்மால்

திணிநிலம் பிளந்துங் காணாச் சேவடி பரவி வெண்ணீறு

அணிகிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 20


அச்சப் பத்து/உரை 17-20


வாளுலாம் எரியும் அஞ்சேன் வரைபுரண் டிடினும் அஞ்சேன்

தோளுலாம் நீற்றன் ஏற்றன் சொற்புதம் கடந்த அப்பன்

தாளதா மரைகளேத்தித் தடமலர் புனைந்து நையும்

ஆளலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 24


அச்சப் பத்து/உரை 21-24


தகைவிலாப் பழியும் அஞ்சேன் சாதலை முன்னம் அஞ்சேன்

புகைமுகந் தெரிகை வீசிப் பொலிந்த அம்பலத்து ளாடும்

முகைநகைக் கொன்றைமாலை முன்னவன் பாதமேத்தி

அகம்நெகா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 28


அச்சப் பத்து/உரை 25-28


தறிசெறி களிறும் அஞ்சேன் தழல்விழி உழுவை அஞ்சேன்

வெறிகமழ் சடையன் அப்பன் விண்ணவர் நண்ண மாட்டாச்

செறிதரு கழல்கள் ஏத்திச் சிறந்தினி திருக்கமாட்டா

அறிவிலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 32


அச்சப் பத்து/உரை 29-32


மஞ்சுலாம் உருமும் அஞ்சேன் மன்னரோ டுறவும் அஞ்சேன்

நஞ்சமே அமுத மாக்கும் நம்பிரான் எம்பிரானாய்ச்

செஞ்செவே ஆண்டு கொண்டான் திருமுண்டம் தீட்ட மாட்டாது

அஞ்சுவா ரவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 36


அச்சப் பத்து/உரை 33-36


கோணிலா வாளி அஞ்சேன் கூற்றவன் சீற்றம் அஞ்சேன்

நீணிலா அணியினானை நினைந்து நைந்துருகி நெக்கு

வாணிலாங் கண்கள் சோர வாழ்ந்தநின்றேத்த மாட்டா

ஆணலா தவரைக் கண்டால் அம்மநாம் அஞ்சு மாறே. 40


அச்சப் பத்து/உரை 37-40


திருச்சிற்றம்பலம்


பிற திருவாசக பாடல்கள்-இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=அச்சப்_பத்து&oldid=2345" இலிருந்து மீள்விக்கப்பட்டது