குறுந்தொகை உரை

விக்கிநூல்கள் இலிருந்து

குறுந்தொகை உரை:

கடவுள் வாழ்த்து[தொகு]

தாமரை புரையும் காமர் சேவடிப்
பவளத் தன்ன மேனித் திகழொளிக்
குன்றி ஏய்க்கும் உடுக்கைக் குன்றின்
நெஞ்சுபக வெறிந்த வஞ்சுடர் நெடுவேல்
சேவலங் கொடியோன் காப்ப
ஏமம் வைக லெய்தின்ற லுலகே

உரை:

தாமரை மலரைப் போன்ற சிவந்த அடிகள்(காலடி), பவழம் போல் சிவந்த உடல், உடலில் இருந்து பரவித் திகழும் ஒளி, குன்றி மணி போல் சிவந்த ஆடை, குன்றே இரண்டாய்ப் பிளக்குமாறு நெடிய வேல் படை, இவற்றுடன் சேவல் சின்னம் பொறித்த கொடியைக் கொண்டவனாகிய முருகப் பெருமான் காத்து நிற்பதால் இந்த உலகம் இனிய நாட்களைப் பெற்று விளங்குகிறது.

குறிஞ்சி - தோழி கூற்று[தொகு]

செங்களம் படக்கொன் றவுணர்த் தேய்த்த
செங்கோல் அம்பிற் செங்கோட்டி யானைக்
கழல்தொடிச் சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக்காந் தட்டே.

முதற் குறிப்பு:

தோழியிற் கூட்டத்தை விரும்பிய தலைவன், செங்காந்தள் பூவைத் தோழிக்குக் கையுறையாகக் கொடுத்துத் தன் குறை கூறுகையில், 'இஃது எமது மலையிலும் பெருமளவு உள்ளது, ஆதலின் இதனை வேண்டேம்' என மறுத்துக் கூறியது.

உரை:

போர்க்களம் குருதியால் சிவக்கும்படி, பகைவர்களைக் கொன்று ஒழித்த நேரான/ வளைவுகளற்ற அம்பினையும், குருதி படிந்த சிவந்த தந்தங்களை உடைய யானையையும், இடையில் உழலும் வாளையும் கொண்ட முருகனுடைய மலையிலே செக்கச் சிவந்த காந்தள் மலர்கள் கொத்துக் கொத்தாய்ப் பூத்து உள்ளன.

குறிஞ்சி - தலைவன் கூற்று[தொகு]

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே.

முதற் குறிப்பு:

இயற்கைப் புணர்ச்சிக்கண், தலைவியின் கூந்தல் இயற்கை மணம் உடையது என்பதைத் தலைவன் வண்டை வினாவுதல் வாயிலாகப் புலப்படுத்தி நலம் பாராட்டியது.

உரை:

பூக்களைத் தேர்ந்து/ ஆராய்ந்து தேன் உண்ணுதலையும், பூக்களிலே அழகிய சிறகுகளையும் கொண்ட வண்டே, நீ சொல்வாயாக! நீ என்னுடைய நிலத்திலுள்ள வண்டு என்பதால் என்னுடைய விருப்பத்தை உரைக்காமல் நீ கண்கூடாக அறிந்த உண்மையைக் கூறுவாயாக! மயிலின் மெல்லிய இயல்பும், செறிவான பற்களும், எழுபிறப்பிலும் என்னுடன் நட்பும் பொருந்திய தலைவியின் கூந்தலை விடவும் மணம் பொருந்திய பூவும் இருக்கின்றதோ!

குறிஞ்சி - தலைவி கூற்று[தொகு]

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரள வின்றே சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே.

முதற் குறிப்பு:

தலைவனின் இயல்பைப் பழித்துக் கூறிய தோழிக்குத் தலைவி பதிலாகக் கூறியது.

உரை:

மலைச்சாரலில் வளரக் கூடிய, கரிய கிளைகளையுடைய குறிஞ்சி மரத்தின் பூவிலிருந்து பெருமளவு தேன் உருவாகும் நாட்டைச் சேர்ந்தவனாகிய தலைவனிடம் நான் கொண்ட நட்பானது, இந்தப் புவியைக் காட்டிலும் பெரியது; வானை விடவும் உயர்ந்தது; கடலின் ஆழத்தை விடவும் அளத்தற்கரிய ஆழம் உடையது.

நெய்தல் - தலைவி கூற்று[தொகு]

நோம், என் நெஞ்சே; நோம், என் நெஞ்சே;
இமை தீயப்பன்ன கண்ணீர் தாங்கி,
அமைதற்கு அமைந்த நம் காதலர்
அமைவு இலர் ஆகுதல், நோம், என் நெஞ்சே
- காமஞ்சேர்குளத்தார்

முதற் குறிப்பு:

உரை:

நெய்தல் - தலைவி கூற்று[தொகு]

அதுகொல், தோழி காம நோயே
வதி குருகு உறங்கும் இன் நிழற் புன்னை,
உடை திரைத் திவலை அரும்பும் தீம் நீர்,
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்
பல் இதழ் உண்கண் பாடு ஒல்லாவே
- நரிவெரூஉத்தலையார்

முதற் குறிப்பு:

உரை:

நெய்தல் - தலைவி கூற்று[தொகு]

நள்ளென்றன்றே, யாமம் சொல் அவிந்து,
இனிது அடங்கினரே, மாக்கள் முனிவு இன்று,
நனந்தலை உலகமும் துஞ்சும்
ஓர் யான் மன்ற துஞ்சாதேனே
-பதுமனார்

முதற் குறிப்பு:

உரை:

பாலை - கண்டோர் கூற்று[தொகு]

வில்லோன் காலன் கழலே தொடியோள்
மெல் அடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார்கொல்? அளியர்தாமே ஆரியர்
கயிறு ஆடு பறையின், கால் பொரக் கலங்கி,
வாகை வெண் நெற்று ஒலிக்கும்,
வேய் பயில் அழுவும் முன்னியோரே
-பெரும்பதுமனார்

முதற் குறிப்பு:

உரை:

மருதம் - காதற்பரத்தை கூற்று[தொகு]

கழனி மாஅத்து விளைந்து உகு தீம் பழம்,
பழன வாளை கதூஉம் ஊரன்
கையும் காலும் தூக்கத் தூக்கும்
ஆடிப் பாவை போல
மேவன செய்யும் தன் புதல்வன் தாய்க்கே
- ஆலங்குடி வங்கனார்

முதற் குறிப்பு:

உரை:

"https://ta.wikibooks.org/w/index.php?title=குறுந்தொகை_உரை&oldid=16662" இலிருந்து மீள்விக்கப்பட்டது