திருக்கோத்தும்பி

விக்கிநூல்கள் இலிருந்து

திருக்கோத்தும்பி[தொகு]

சிவனோடு ஐக்கியம்

(தில்லையில் அருளியது- நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா)


பூவேறு கோனும் புரந்தரனும் பொற்பமைந்த

நாவேறு செல்வியும் நாரணணும் நான் மறையும்

மாவேறு சோதியும் வானவருந் தாமறியாச்

சேவேறு சேவடிக்கே சென்றுதாய் கோத்தும்பீ. 4


திருக்கோத்தும்பி/உரை 1-4


நானார் என் உள்ளமார் ஞானங்க ளார் என்னை யாரறிவார்

வானோர் பிரானென்னை ஆண்டிலனேல் மதிமயங்கி

ஊனா ருடைதலையில் உண்பலிதேர் அம்பலவன்

தேனார் கமலமே சென்றூதாய் கோத்தும்பீ. 8


திருக்கோத்தும்பி/உரை 5-8


தினைத்தனை உள்ளதோர் பூவினில் தேன்உண்ணாதே

நினைத்தொறும் காண்தொறும் பேசுந்தொறும் எப்போதும்

அனைத்தெலும் புள்நெக ஆனந்தத் தேன் சொரியும்

குனிப்புடையானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 12


திருக்கோத்தும்பி/உரை 9-12


கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின்

என்னப்பன் என்னொப்பில் என்னையும் ஆட்கொண்டருளி

வண்ணப் பணித்தென்னை வாவென்ற வான் கருணைச்

கண்ணப்பென் நீற்றற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 16


திருக்கோத்தும்பி/உரை 13-16


அத்தேவர் தேவர் அவர்தேவ ரென்றிங்ஙன்

பொய்த்தேவு பேசிப் புலம்புகின்ற பூதலத்தே

பத்தேதும் இல்லாதென் பற்றறநான் பற்றிநின்ற

மெய்த்தேவர் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 20


திருக்கோத்தும்பி/உரை 17-20


வைத்த நிதிபெண்டிர் மக்கள்குலங் கல்வியென்னும்

பித்த உலகிற் பிறப்போ டிறப்பென்னுஞ்

சித்த விகாரக் கலக்கம் தெளிவித்த

வித்தகத் தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 24


திருக்கோத்தும்பி/உரை 21-24


சட்டோ நினைக்க மனத்தமுதாஞ் சங்கரனைக்

கெட்டேன் மறப்பேனோ கேடுபடாத் திருவடியை

ஒட்டாத பாவித் தொழும்பரைநாம் உருவறியோம்

சிட்டாய சிட்டற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 28


திருக்கோத்தும்பி/உரை 25-28


ஒன்றாய் முளைத்தெழுந் தெத்தனையோ கவடுவிட்டு

நன்றாக வைத்தென்னை நாய்சிவிகை ஏற்றுவித்த

என்தாதை தாதைக்கும் எம்மனைக்குந் தம்பெருமான்

குன்றாத செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 32


திருக்கோத்தும்பி/உரை 29-32


கரணங்கள் எல்லாங் கடந்துநின்ற கறைமிடற்றன்

சரணங்க ளேசென்று சார்தலுமே தான்எனக்கு

மரணம் பிறப்பென் றிவையிரண்டின் மயக்கறுத்த

கருணைக் கடலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 36


திருக்கோத்தும்பி/உரை 33-36


நோயுற்று மூத்துநான் நுந்துகன்றா யிங்கிருந்து

நாயுற்ற செல்வம் நயந்தறியா வண்ணமெல்லாந்

தாயுற்று வந்தென்னை ஆண்டுகொண்டதன்கருணைத்

தேயுற்ற செல்வற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 40


திருக்கோத்தும்பி/உரை 37-40


வன்னெஞ்சக் கள்வன் மனவலியன் என்னாதே

கல்நெஞ் சுருக்கிக் கருணையினால் ஆண்டுகொண்ட

அன்னஞ் திளைக்கும் அணிதில்லை அம்பலவன்

பொன்னங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 44


திருக்கோத்தும்பி/உரை 41-44


நாயேனைத் தன்னடிகள் பாடுவித்த நாயகனைப்

பேயேன துள்ளப் பிழைபொறுக்கும் பெருமையனைச்

சீயேதும் இல்லாதென் செய்பணிகள் கொண்டருளந்

தாயான ஈசற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 48


திருக்கோத்தும்பி/உரை 45-48


நான்தனக் கன்பின்னை நானுந்தா னும் அறிவோம்

தானென்னை ஆட்கொண்ட தெல்லாருந் தாமறிவார்

ஆன கருணையும் அங்குற்றே தானவனே

கோனென்னைக் கூடக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 52


திருக்கோத்தும்பி/உரை 49-52


கருவாய் உலகினுக் கப்புறமாய் இப்புறத்தே

மருவார் மலர்க்குழல் மாதினொடும் வந்தருளி

அருவாய் மறைபயில் அந்தணனாய் ஆண்டுகொண்ட

திருவான தேவற்கே சென்றூதாய் கோத்தும்பீ. 56


திருக்கோத்தும்பி/உரை 53-56


நானும்என் சிந்தையும் நாயகனுக் கெவ்விடத்தோம்

தானுந்தன் தையலுந் தாழ்சடையோன் ஆண்டிலனேல்

வானுந் திசைகளும் மாகடலும் ஆயபிரான்

தேனுந்து சேவடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 60


திருக்கோத்தும்பி/உரை 57-60


உள்ளப் படாத திருஉருவை உள்ளுதலும்

கள்ளப் படாத களிவந்த வான்கருணை

வெள்ளப் பிரான்என் பிரான்என்னை வேறேஆட்

கொள்ளப் பிரானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 64


திருக்கோத்தும்பி/உரை 61-64


பொய்யாய செல்வத்தே புக்கழுந்தி நாள்தோறும்

மெய்யாக் கருதிக்கிடந்தேனை ஆட்கொண்ட

ஐயாவென் ஆரூயிரே அம்பலவா என்றவன்றன்

செய்யார் மலரடிக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 68


திருக்கோத்தும்பி/உரை 65-68


தோலுந் துகிலுங் குழையுஞ் சுருள்தோடும்

பால்வெள்ளை நீறும் பசுஞ்சாந்தும் பைங்கிளியுஞ்

சூலமுந் தொக்க வளையு முடைத்தொன்மைக்

கோலமே நோக்கிக் குளிர்ந்தூதாய் கோத்தும்பீ. 72


திருக்கோத்தும்பி/உரை 69-72


கள்வன் கடியன் கலதியிவன் என்னாத

வள்ளல் வரவர வந்தொழிந்தான் என் மனத்தே

உள்ளத் துறதுய ரொன்றொழியா வண்ணமெல்லாந்

தெள்ளுங் கழலுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 76


திருக்கோத்தும்பி/உரை 73-76


பூமேல் அயனோடு மாலும் புகலிரதென்று

ஏமாறி நிற்க அடியேன் இறுமாக்க

நாய்மேல் தவிசிfட்டு நன்றாய்ப் பொருட்படுத்த

தீமேனி யானுக்கே சென்றூதாய் கோத்தும்பீ. 80


திருக்கோத்தும்பி/உரை 77-80


திருச்சிற்றம்பலம்

பிற திருவாசக பாடல்கள்-இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=திருக்கோத்தும்பி&oldid=2344" இலிருந்து மீள்விக்கப்பட்டது