யாத்திரைப் பத்து

விக்கிநூல்கள் இலிருந்து

பூவார் சென்னி மன்னனெம் புயங்கப் பெருமான் சிறியோமை

ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும் வெள்ளக் கருணையினால்

ஆவா என்னப் பட்டன் பாய் ஆட்பட் டீர்வந் தொருப்படுமிள்

போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட் டுடையான் கழல்புகவே. 4


யாத்திரைப் பத்து/உரை 1-4


புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப் பெருமான் பூங்கழல்கள்

மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா போக விடுமின்கள்

நகவே ஞாலத் துள்புகுந்து நாயே அனைய நமையாண்ட

தகவே யுடையான் தனைச்சாரத் தளரா திருப்பார் தாந்தாமே. 8


யாத்திரைப் பத்து/உரை 5-8


தாமே தமக்குச் சுற்றமும் தாமே தமக்கு விதிவகையும்

யாமார் எமதார் பாசமார் என்னமாயம் இவைபோகக்

கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன் குறிப்பே குறிக்கொண்டு

போமா றமைமின் பொய்நீக்கப் புயங்கன் ஆள்வான் பொன்னடிக்கே. 12


யாத்திரைப் பத்து/உரை 9-12


அடியார் ஆனீர் எல்லீரும் அகல விடுமின் விளையாட்டைக்

கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண் டிருமின் திருக்குறிப்பைச்

செடிசே ருடைலச் செலநீக்கிச் சிவலோகத்தே நமைவைப்பான்

பொடிசேர் மேளிப் புயங்கன்தன் பூவார் கழற்கே புகவிடுமே. 16


யாத்திரைப் பத்து/உரை 13-16


விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர் காலம் இனியில்லை

உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ வதற்கே ஒருப் படுமின்

அடைவோம் நாம்போய்ச் சிவபுரத்துள் அணியார் கதவ தடையாமே

புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கள் ஆள்வான் புகழ்களையே. 20


யாத்திரைப் பத்து/உரை 16-20


புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன் தானே புந்திவைத்திட்டு

இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர் இடையூ றடையாமே

திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று சிவன்தாள் வணங்கிநாம்

நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம் உருகி நிற்போமே. 24


யாத்திரைப் பத்து/உரை 21-24


நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம் இனிநாம் செல்வோமே

பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன் ஆவான் பொன்னடிக்கே

நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும் பரிசே ஒருப்படுமின்

பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற் கரியன் பெருமானே. 28


யாத்திரைப் பத்து/உரை 25-28


பெருமான் பேரானந்ததுப் பிரியா திருக்கப் பெற்றீர்காள்

அருமா லுற்றிப் பின்னைநீர் அம்மா அழுங்கி அரற்றாதே

திருமா மணிசேர் திருக்கதவங் திறந்தபோதே சிவபுரத்துச்

திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள் சென்று சேர்வோமே. 32


யாத்திரைப் பத்து/உரை 29-32


சேரக் கருகிச் சிந்தனையைத் திருந்த வைத்துச் சிந்திமின்

போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன் புயங்கன் அருளமுதம்

ஆரப் பருகி ஆராத ஆர்வங்கூர அழுந்துவீர்

போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற் கிடந்து புரளாதே. 36


யாத்திரைப் பத்து/உரை 33-36


புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே வந்தான் ஆகாதீர்

மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட் கலங்கி மயங்குவீர்

தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ கக்கோன் திருப்புயங்கன்

அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ அந்தோ அந்தோவே. 40


யாத்திரைப் பத்து/உரை 37-40


திருச்சிற்றம்பலம்


பிற திருவாசக பாடல்கள்-இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikibooks.org/w/index.php?title=யாத்திரைப்_பத்து&oldid=2347" இலிருந்து மீள்விக்கப்பட்டது