நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம்/பெருமாள் திருமொழி/3ம் திருமொழி

விக்கிநூல்கள் இலிருந்து

--வெ.ராமன் 08:23, 1 ஜூலை 2006 (UTC)

	  அழகிய மணவாளன் -3

		கலி விருத்தம்

மெய்யில் வாழ்க்கையை மெய்யெனக் கொள்ளும்*இவ்
வையந் தன்னொடும் கூடுவ  தில்லையான்*
ஐயனே! அரங்கா! என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டாழிந்தேன் என்தன்  மாலுக்கே 		         1
 
நூலி னேரிடை யார்திறத்தே நிற்கும்*
ஞாலந்  தன்னொடும் கூடுவ தில்லையான்*
ஆலியா! அழையா! அரங்கா! வென்று*
மாலெ ழுந்தொழிந்தேன் என்தன் மாலுக்கே 			   2
 
மார னார்வரி வெஞ்சிலைக்கு ஆட்செய்யும்*
பாரி னாரொடும் கூடுவ தில்லையான்*
ஆர மார்வ னரங்க னனந்தன்நல்
நாரணன் நரகாந்தகன் பித்தனே 				    3
 
உண்டியே உடையே உகந்தோடும்*இம்
மண்ட  லத்தொடும் கூடுவ தில்லையான்*
அண்ட வாணன் அரங்கன்* வன்பேய்முலை
உண்ட வாயன்தன் உன்ம த்தன் காண்மினே 		        4
 
தீதில் நன்னெறி நிற்கஅல் லாதுசெய்*
நீதி யாரொடும் கூடுவ தில்லையான்*
ஆதி ஆயன் அரங்கன்* அந்தாமரைப்
பேதை மாமண வாளன்தன் பித்தனே 			       5

எம்ப ரத்தரல் லாரொடும் கூடலன்*
உம்பர் வாழ்வையொன் றாக கருதிலன்*
தம்பிரான் அமரர்க்கு* அரங்கநகர்
எம்பிரானுக்கு எழுமையும் பித்தனே.			     6
 
எத்தி றத்திலும் யாரொடும் கூடும்*அச்
சித்தந் தன்னைத் தவிர்த்தனன் செங்கண்மால்*
அத்தனே! அரங்கா! என்ற ழைக்கின்றேன்*
பித்த னாயொழிந்தேன் எம்பி ரானுக்கே 			     7

பேய ரேயெனக் கியாவரும்* யானுமோர்
பேய னேயெவர்க் கும்இது பேசியென்!*
ஆயனே! அரங்கா! என்ற ழைக்கின்றேன்*
பேய னாயொழிந் தேன் எம்பி ரானுக்கே 			   8
 
அங்கை யாழி யரங்க னடியிணை*
தங்கு சிந்தைத் தனிப்பெரும் பித்தனாய்*
கொங்கர் கோன்குல சேகரன் சொன்னசொல்*
இங்கு வல்லவர்க்கு ஏதமொன் றில்லையே 		          9
 
குலசேகரப்பெருமாள் திருவடிகளே சரணம்