உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர்:வாணி தியா

விக்கிநூல்கள் இலிருந்து

செருப்பு


"அம்மா.. இங்க பாரு.. செருப்பு பிஞ்சிடுச்சு.. ஆஆஆ"

" என்னாச்சுடா கண்ணா"

" அம்மா கல்லு தடுக்கி விட்டு செருப்பு பிஞ்சிடுச்சு.. இங்க பாரு"

" சரி வா ...உனக்கு கோயிலுக்கு போயிட்டு வர்றப்போ வாங்கி தரேன்"

        கண்ணனும் அவன் அம்மாவும் கோயிலுக்கு செல்கின்றனர். வெளியே வர அவன் அம்மா எந்திரிக்க, அவருக்கு முன்னதாகவே வேகமாக ஓடி போய் வாயிலை அடைகிறான் அந்த குட்டி பையன்.

      தன் அம்மா வருவதை பார்ப்பதற்காக அடிக்கடி உள்ளே உள்ளே பார்த்து கொண்டிருக்கிறான். காலுக்கு சூடு தாங்க முடியவில்லை!! சின்ன பையனுக்கு அது புரியவும் இல்லை!!

" ஆ... கால் வேற சுடுதே" தன் கால்களை மாறிமாறி வைத்து நின்று கொண்டிருக்கிறான்.

      கோவில் வாசலில் நிறைய பிச்சைக்காரர்கள் அமர்ந்திருக்க, அவர்கள் எல்லாம் கடந்து ஒரு செருப்பு தைப்பவர் அமர்ந்திருந்தார். இவன் நிற்கமுடியாமல் கால்களை மாறி மாறி நிற்பதை கண்டவர்,

" குட்டி... இங்க வா..." என்று அவனை அழைத்தார்.

       அவரிடத்தில் சென்றவன் அவரை மேலும் கீழுமாக பார்க்கிறான். அழுக்கடைந்த சட்டையும், அதேபோல் ஒரு வேட்டியும் கட்டி இருந்த அவரும் பார்ப்பதற்கு அழுக்காகதான் இருந்தார்.

அவரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் திருதிருவென்று விழித்துக் கொண்டிருந்தான் அவன்.

" என்ன குட்டி.. செருப்பு எங்க.. போட்டுட்டு நீக்க வேண்டியது தானே.."

" அதுவா நானும் என் அம்மாவும் கோயிலுக்கு வந்திருக்கோம்.. வர்றப்போ செருப்பு பிஞ்சுருச்சு.. போறப்ப தான் வாங்கிட்டு போகணும்.."

" அப்படியா.. அப்போ செருப்பு வாங்கற வரைக்கும் எப்படி போவ கட வரைக்கும்..  சூடு தாங்காதே"

" அச்சோ ஆமால.. நான் அதை பத்தி யோசிக்கவே இல்லையே.." கண்ணன் தன் மழலை குரலில்  கூறுகிறான்.

"சரி என்கிட்ட உனக்கான ஒரு குட்டி செருப்பு இருக்கு.. இப்போதைக்கு அத போட்டுக்கோ.. நீ கடைக்கு போய் புதுசா இருக்கு வாங்குனதும்  எனக்கு அந்த செருப்பை திருப்பி கொண்டு வந்து கொடுத்துடு"


        அவனும் சரி என்று தலையாட்டிவிட்டு, அவர் கொடுத்த ஒரு குட்டி செருப்பை போட்டுக்கொண்டான்.

          சரியாக அவன் அம்மா வெளியே வர, வேகமாக அவரிடம் ஓடியவன், "அம்மா அந்த தாத்தா நான் புது செருப்பு வாங்கிட்டு வந்து கொடுக்குற வரைக்கும் இந்த செருப்பை போட்டு சொல்லி தந்தாரு" என்று கூற,

" சரி" என்று கூறிய அம்மாவும் பக்கத்தில் ஒரு ஐந்து நிமிட இடைவெளியில் இருந்த ஒரு கடைக்கு கூட்டிட்டு போய் அவனுக்கு ஒரு நல்ல ஷூ எடுத்துக் கொடுத்தார்.

       அதை பார்த்ததும் அவனது கண்கள் மகிழ்ச்சியில் மின்ன சரி வா அதை தாத்தாவுக்கு நன்றி சொல்லிட்டு இந்த பழைய செருப்பை கொடுத்துட்டு வந்திடலாம் என்று அவர் கூற,  அவனும் சரி என்று தலையாட்டிவிட்டு அவரிடம் கொடுக்க வந்தனர்.

" ரொம்ப தேங்க்ஸ் தாத்தா.. இந்த செருப்பை இல்லன்னா எனக்கு ரொம்ப கஷ்டமா போயிருக்கும்" என்று அந்தப் பிஞ்சு தன் மழலையில் கூற,

" பரவாயில்ல டா செல்லம்" என்று கூறியவர் அவன் கொடுத்த செருப்பை வாங்கி வைத்துவிட்டு மீண்டும் தன் வேலையில் மூழ்கினார்.

       பின் இருவரும் கிளம்பி வீட்டிற்கு வந்தனர்.

"அம்மா அந்த தாத்தா ரொம்ப நல்லவர்ல ...நா செருப்பு இல்லாம ரொம்ப கஷ்டப்படுறன்னு அவர் பார்த்ததும் புரிஞ்சுகிட்டாரு.. அவர்கிட்ட இருக்குறதை கொடுத்து எனக்கு உதவி செஞ்சிருக்கார் இல்லம்மா"

" ஆமாடா கண்ணா.. அதுமாதிரி நீயும் உன் கிட்ட யாராவது உதவினு கேட்டா செய்யணும் சரியா.."

" சரிம்மா "

         இரவு அவனது தந்தை வந்துவிட, அவரிடமும் அந்த செருப்புகாரரின் செயலை அவரிடம் கூறுகிறான்.

" ஏண்டா போயும் போயும் ஒரு செருப்பு தைக்கிறவன்.. யாரோட பழைய செருப்போ.. அதை ஏன் நீ போட்டுக்கிட்டு நடந்த"

" அப்பா அப்படி சொல்லாதீங்க.. அவர் மட்டும் அந்த நேரத்தில் எனக்கு செருப்பு தரலனா நான் செருப்பு வாங்குறதுக்குள்ள என் கால்லாம் புண்ணா போயிருக்கும்... என்னுடைய தேவை என்னன்னு கேட்காம அவரே புரிஞ்சுக்கிட்டு எனக்கு செஞ்சாரு.. ரொம்ப நல்லவர்"

  தன் மழலை குரலில் கூறும் தன் மகனை பெருமையுடன் பார்த்தார் அவனது தந்தை.

           தன் தந்தையை ஆனாலும் தப்பை கேட்கும் குணமும்,  பிறர் செய்த உதவியை மறவாத குணமும் அவருக்குள் மிகப் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

" சரிடா கண்ணா". இத்தனை சின்ன வயதில் இவ்வளவு அறிவாக யோசிப்பதற்காக தன் மகனையும், அப்படிப்பட்ட அறிவு அவனுக்கு கொண்டு வந்த தன் மனைவியையும் பெருமை பொங்க பார்த்தார் அவர்.

                                            - முற்றும்❤

"https://ta.wikibooks.org/w/index.php?title=பயனர்:வாணி_தியா&oldid=17684" இலிருந்து மீள்விக்கப்பட்டது