ஈசாப் நீதிக் கதைகள்/தவளையும் சுண்டெலிகளும்
Jump to navigation
Jump to search
தவளையும் சுண்டெலியும்
ஒரு காட்டில் தவளையும் சுண்டெலியும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. தவளை வாழ்ந்து வந்த குளத்தில் கோடைக் காலத்தில் நீர் வற்றிவிடவே தவளை மிகவும் வருந்தியது.எனவே எலி அதற்கு உதவி செய்ய நினைத்தது. அங்குமிங்கும் தேடி ஒரு குளத்தைக் கண்டறிந்தது. குளத்தினருகில் சென்ற போது, குளம் யாருக்குச் சொந்தம் என்பதில் இருவருக்கும் சண்டை வந்தது. எலி தன் இனத்தவரை ஆதரவிற்குக் கூப்பிட்டது. தவளையும் அதேபோல் தன் இனத்தவர்களை உதவிக்கு அழைத்தது. சண்டையில் நிறைய எலிகளும் தவளைகளும் இறந்து போயின. வானத்தில் வட்டமிட்டுக் கொண்டிருந்த பருந்துகள் இதைக் கண்டன. சண்டையிட்டுக் கொண்டிருந்த எலிகள் , தவளைகள் மீது பாய்ந்து தமக்கு இரையாக்கிக் கொண்டன.
நீதி: எளியவர்கள் ஒற்றுமையின்றி இருப்பது வலியவர்களுக்கு நன்மையாகும்