ஈசாப் நீதிக் கதைகள்/நாயும் அதன் நிழலும்

விக்கிநூல்கள் இலிருந்து

ஒரு நாய் ஒன்று ஒரு இறைச்சிக் கடையில் இருந்த மாமிசத்துண்டை திருடியது அதனை வாயில் கவ்விக்கொண்டு தன் இருப்பிடத்திற்குப் புறப்பட்டது வழியில் ஒரு ஓடையைக்கடக்க வேண்டியிருந்தது. நாய் ஓடையைக் கடக்கும் போது கீழே தண்ணீரைப் பார்த்தது. அந்தத் தண்ணீரில் அதன் உருவம் தெரிந்தது. தண்ணீரில் தெரிந்த அதன் உருவத்திலும் வாயில் மாமிசத்துண்டு இருந்தது. அதைக் கண்ட நாய் அந்த மாமிசத்துண்டினையும் கவ்வ எண்ணியது. உடனே அது பலமாக 'லொள்','லொள்' எனக் குரைத்து கொண்டே தன்னீரில் தெரிந்த நாயின் மீது பாய்ந்தது. அதனால் அதன் வாயில் இருந்த மாமிசமும் தண்ணீரில் விழுந்தது. அதனைத் தேடிச் சென்ற நாய் தண்ணீரில் தத்தளித்தது. மிகவும் துன்பத்துடன் உயிரக் காப்பாற்றிக் கொண்டால் போதும் என கரையேற வேண்டியதாயிற்று.


[ பேராசை பேரிழப்பு ]