ஓஷோவின் பேருரைகள்/மகிழ்வு துக்கம்

விக்கிநூல்கள் இலிருந்து

ஓஷோ – பிரேம் தர்ஷன், உனக்கு மகிழ்ச்சி எதைச் கொடுக்க முடியவில்லையோ அதையெல்லாம் துக்கம் கொண்டு இருகிறது.உண்மையில் மகிழ்ச்சி உன்னிடமிருந்து பல பொருள்களை எடுத்து தூரமாய் வைத்து விடுகிறது. எப்பொழுதாகிலும் அல்லது எப்பொழுதும் கொண்டிருக்கிற அனைத்தையுமே மகிழ்ச்சி எடுத்து விடுகிறது.மகிழ்ச்சி உன்னை அழித்து விடுகிறது. துக்கம் உங்களின் தன முனைப்பை வளர்க்கிறது, மேலும் தன முனைப்பு இல்லாத நிலையே மகிழ்ச்சி ஆகும். இந்தப் பிரச்னை என்பது மிக முக்கிமான பிரச்சினை ஆகும். அதனால்தான் மக்களை மகிழ்வாகக் காண்பது மிகவும் கஷ்டமானதாக இருக்கிறது. அதனால் என்னமோ கோடிகணக்கான மக்கள் துக்கத்துள் வாழ்கின்றனர், அவ்வாறு வாழ்வதை முடிவு எடுத்து விட்டவர்கள் அவர்கள். இது துக்கமாக வாழ்தல் என்பது மிக நேர்த்தியான தன முனைப்பை அளிக்கிறது. துக்கத்தில் நீங்கள் என்பது இருக்கிறீர்கள், மகிழ்வில்… நீங்கள் என்பது இருப்பதில்லை. துக்கம் என்பது படித்து விட்ட படிகமாகும். மகிழ்வு என்பது நீங்கள் கரைந்து விடுவது.


இதை உணர்ந்த கணமே பொருள்கள் நிர்மூலமனதாகி விடுகிறது. துக்கம் உங்களை விசேசமான பொருளாக்கி விடுகிறது. மகிழ்ச்சி என்பது பிரபஞ்சத்தின் ஒரு அங்கம்; மகிழ்ச்சியில், எந்த ஒரு விசேசமான நிலையும் இல்லை. மரங்கள் மகிழ்வாய் இருக்கின்றன மேலும் பிராணிகள் மகிழ்வாய் இருக்கின்றன மேலும் பறவைகள் திருப்தி உடையவாய் மகிழ்வில் இருக்கின்றன. இருப்பவை அனைத்தும் மகிழ்ச்சியானதாய், திருப்தி உடையதாய் இருக்கின்றன மனிதர்களைத் தவிர. துக்கமாய் இருப்பதால் என்னமோ மனிதன் பெரிதளவில் பிரத்யேகமானவனாகி விடுகிறான்.

துக்கம் உங்களை நோக்கி பிறரை ஈர்க்கும் திறன் உள்ளதாய் இருக்கிறது. எப்பொழுதெல்லாம் துக்கமாய் இருக்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் உங்களை விரும்புகிறவர்கள் தானாகவே உங்களை நோக்கி பரிதாபப் பட ஆரம்பித்து விடுகிறார்கள். அனைவருமே உங்களை கவனிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். யார்தான் பரிதாபமான மனிதரை காயப்படுத்த விருப்புவர்? யார்தான் பரிதாபமான மனிதரை நோக்கி பொறாமை கொள்ளுவார்கள்? யார்தான் பரிதாபமான மனிதரை நோக்கி எதிர்த்து நிற்ப்பார்கள்? இவைகள் அனைத்துமே மிக ஆழமான பொருள் கொண்ட கேள்விகள். துயரமான மனிதர்கள் எப்பொழுதுமே கவனிக்கப் படுவதற்கு, அன்பின் மூலப் பொருளாய் இருப்பதற்கு ஏங்குகிறார்கள். மிகப் பெரிய மூலதனம் துக்கமாய் இருப்பதில் இருக்கிறது. மனைவி துக்கமாய் இல்லை என்றால் அவளைப் பற்றி கணவன் மறந்து விடுவான். அவள் துக்கமாய் இருக்கின்றாள் என்றால் அவளை புறம தள்ள கணவனால் முடிவதில்லை. கணவன் துக்கமாய் இருந்தால், குடும்பம் முழுவதுமே, மனைவி, குழந்தைகள் அனைவருமே அவனைச் சுற்றி கொள்கின்றனர், அவனைப் பற்றி கவலை கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர். இது மிகப் பெரிய ஆறுதலைக் கொடுத்து விடுகிறது. எவன் ஒருவன் குடும்பம், நண்பர்களை வைத்து இருக்கிறானோ அவன் தான் தனிமையாய் இருக்கிறோம் என்பதை உணரப் போவதில்லை.

எப்பொழுதெல்லாம் நீங்கள் நலமாயில்லையோ, துக்கத்தில் இருக்கிறீர்களோ, நண்பர்கள் உன்னை ஆறுதல் செய்ய உங்களைக் காண வருகிறார்கள், . எப்பொழுது நீங்கள் மகிழ்ச்சியாய் இருக்கிறீர்களோ அப்பொழுது அதே நண்பர்கள் உங்களை நோக்கி பொறாமை கொள்ள ஆரம்பிக்கிறார்கள். எப்பொழுது நீ உண்மையிலேயே மகிழ்வாய் இருக்கிறாயோ அப்பொழுது, இந்த உலகமே உனக்கு எதிராய் திரும்பி விடுகிறது.

எவரும் மகிழ்வான மனிதரை விரும்புவது இல்லை, ஏனெனில் மகிழ்வு நபர் அவர்களின் தன்முனைப்பை (ego இப்படி சொன்னாத்தான் புரியுது.) காயப் படுத்துவராகி விடுகிறார். ஆகவேதான் நாம் இருள் நோக்கி தவழ்ந்து செல்கிறோம், மற்றும் நரகத்தை நோக்கி; அவர்கள் தங்களுக்குள்ளே கேட்டுக் கொள்கிறார்கள் என்ன தைரியம் இவனுக்கு, நாங்கள் அனைவருமே துக்கத்தில் இருக்கும் போது இவன் சந்தோசமாய் இருக்கிறான்,


துக்கம்[தொகு]

உண்மையிலே உலகம் துக்ககரமான மனிதர்களைப் குறித்து ஒரு மார்க்கத்தையே கொண்டு இருக்கிறது, மேலும் ஒருவரும் இந்த உலகம் தனக்கு எதிராகத் திரும்ப வைக்கும் அளவிற்கு தைரியம் கொண்டவர்களாக இருப்பதில்லை; உலகை தனக்கு எதிராக திருப்புவது என்பது மிகவும் அபாயகரமானது ஆகும், மேலும் கஷ்டகரமானது கூட. துக்கத்தை பிடித்து தொங்கிக் கொண்டு இருப்பது என்பது ரொம்பவும் மேலான விஷயம் ஆகும், இந்த தொங்குதல் என்பது உன்னை ஒரு கூட்டத்துடன் ஒரு பகுதி நபராக வைத்திருக்க உதவும். மகிழ்ச்சி, அப்போது நீ ஒரு தனி மனிதன் ஆகி விடுகின்றாய்; துக்கம், உன்னை ஒரு மந்தையுடன் இணைத்து விடுகின்றது — இந்து, முகமது, கிறிஸ்துவர், இந்தியன், அரேபியன், ஜப்பானிஸ். மகிசியில்? உன்னால் மகிழ்ச்சி என்பதை அறிய முடிகிறதா? மகிழ்ச்சி என்பது ஒரு கிருஸ்துவனா இல்லை முகமதுவா? மகிழ்ச்சி என்பது எளிதாக மகிழ்ச்சியாகவே இருக்கிறது. மகிழ்ச்சியில் ஒருவர் மற்றொரு உலகிற்க்கே மாற்றம் அடைந்து விடுகிறார். அதற்கடுத்து எந்த உலகை மனிதர்களின் மனம் உருவாக்கி வைத்து உள்ளதோ அதில் இருப்பதில்லை, கடந்த கலந்த்தின் ஒரு பகுதியாக அவர் இருப்பதில்லை, கடந்த களத்தின் அழுக்கடைந்த வரலாற்றில் அவர் இருப்பதில்லை. அவர் காலத்தின் ஒரு பகுதியாகக் கூட இருப்பதில்லை. உண்மையிலேயே நீங்கள் மகிழ்ச்சியில், ஆசிர்வாதத்தில் இருக்கும் கணம், காலம் மறைந்து விடுகிறது, வெளியும் மறைந்து விடுகிறது.

ஆல்பர்ட் ஐன்ஸ்டின் கூறுகிறார், முந்தைய விஞ்ஞானிகள் எல்லாருமே இரண்டு விதமான நிலைகள் (வெளி மற்றும் காலம்) இருக்கின்றன என்று இருந்து விட்டார்கள். அனால் அவர் கூறுகிறார் அந்த இரண்டு நிலைகள் உண்மையில் இரண்டு நிலைகள் கிடையாது — அவைகள் ஒரு நிலையின் இரண்டு விதமான முகங்கள். அவர் ஒரு வார்த்தையை சுழற்றுகிறார் வெளியுடையகாலம், ஒரு வார்த்தை. காலம் என்பது வெளியின் நான்காவது பரிமாணம் ஆகும். ஐன்ஸ்டின் எந்த ஒரு மதத்தையும் சார்ந்தவர் அல்ல, இல்லாவிட்டால் அவர் மூன்றாவது நிலையையும் – அதாவது மீஇறையியல் எனப் பெயர் சூட்டி இருப்பார், வெளியோ அல்லது நேரமோ அல்ல - அறிமுகம் செய்து இருப்பார். ஆனால் அதுவும் உள்ளது மீ இறையியலும் உள்ளதுதான், நான் அதை சட்சியாதல் எனக் குறிப்பிடுவேன். இந்த மூன்றும் அங்கு இருக்கும் போது, நீங்கள் மூநிலையை அறிய முடியும் அல்லவா அதையே நான் சட்சியாதல் என்கிறேன். உங்களால் திரிமூர்த்தியின் மூன்று கருத்துருக்களை பெற முடியும், கடவுளின் மூன்று முகங்கள். அடுத்து நீங்கள் நான்கு பரிமாணங்களை பெற முடியும். அப்போது உண்மை நிலை என்பது நான்கு பரிமாணங்களை பெற்றதாய் இருக்கும்: வெளியின் மூன்று பரிமாணங்கள், மேலும் காலத்தின் நான்காவது பரிமாணமும் ஆகும். ஆனால் அங்கு வேறு ஏதோ ஒன்று வந்து விடுகிறது, அதனை ஐந்தாவது பரிமாணம் என அழைக்க முடிவதில்லை, ஏனெனில் அது ஐந்தாவது உண்மை நிலையில்லை, அது ஒரு முழுமை – மீஇறையியல். நீங்கள் ஆசிர்வாதத்தை பெரும் போது தாங்களாகவே மீஇறையினுள் நுழைந்து விட முடியும். அது ஒரு சமுகம் அல்ல, அது ஒரு பழமை அல்ல, அதனால் மனிதனின் மூளைக்குச் செய்ய ஒன்றுமே இருப்பதில்லை.

துக்கத்துடன் ஒட்டிக கொள்வது என்றால் என்ன?[தொகு]

அதற்க்கு சில காரணங்கள் உள்ளன. துக்கத்தை நோக்கி உங்களின் பார்வையை திருப்பிப் பாருங்கள், அதனை பின் தொடருங்கள்,

அப்போது உங்களால் காரணங்களை அறிந்து கொள்ள முடியும்.மேலும் உங்களை நீங்கள் மகிழ்வாய் இருப்பதற்கு உட்படுத்திக் கொண்ட கணங்களையும் பாருங்கள், வித்தியாசங்கள் என்ன என்பதை சற்று பாருங்கள். அங்கு சில விசயங்கள் இருக்கின்றன: துக்கமாய் இருந்த கணங்களில் நீங்கள் இணக்கம் உள்ளவராய் இருந்து இருப்பீர்கள். சமுகம் அதை விரும்புகிறது, மனிதர்கள் மரியாதையை கொடுக்கின்றனர், மிகப் பெரும் மரியாதைகளும் கொண்டு இருக்கிறீர்கள், நீங்கள் ஒரு சாமியாராய் ஆகி விடுகிறீர்கள்; ஆகவேதான் உங்களின் அனைத்து சாமியார்களும் துக்கரமானவர்கள். துக்கம் என்பது அவர்களின் முகத்தில் எழுதப் பட்டு இருக்கும், அவர்களின் கண்களிலும்தான்.

ஏனெனில் அவர்கள் அனைத்து மகிழ்ச்சிகளுக்கு எதிராய் இருக்கிறார்கள் ஆகவே துக்கமாய் இருக்கின்றனர். அனைத்து மகிழ்ச்சிகளையும் கண்டனம் செய்கிறார்கள்; இன்பமே என்ற கொள்கையை எதிர்க்கிறார்கள், அவர்கள் அனைத்து விதங்களிலும் மகிழ்வை பாவம் என்கிறார்கள். ஆகவேதான் அவர்கள் துக்கமாய் இருக்கிறார்கள், எனவே அனைத்து உலகமும் துக்கமாய் இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். உண்மையில் சாமியார்களின் உலகம் என்பது துக்கரமான உலகமாய் மட்டுமே இருக்க முடிகிறது. மகிழ்வான உலகில் அவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்படப்பட்டு விடுவார்கள், மன ரீதியாக மருத்துவம் செய்யப்படுவார்கள், அவர்கள் நோய்குணம் கொண்டவர்கள். நான் எத்தனையோ சாமியார்களை பார்த்துவிட்டேன், மேலும் அவர்களின் வாழ்க்கை முழுவதிலும் பார்த்துவிட்டேன். தொண்ணூற்றி ஒன்பது சதவிதத்தினர் இயல்புக்கு அப்பாற்பட்டவர்கள், எளிதாக அசாதரனமானவர்கள் — புத்தி தடுமாறியவர்கள், மன ரீதியாய் பாதிக்கப்பட்டவர்கள். ஆனால் அவர்கள் மதிக்கப்படுகின்றனர் – அவர்களின் துக்ககரமான வாழ்க்கைக்காக மதிக்கப் படுகின்றனர் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளாவு அதிகமாய் அவர்கள் துக்கமாய் இருந்து இருக்கிறார்களோ அந்த அளவு அவர்கள் மதிக்கப் படுகின்றனர். தினமும் கலையில் அவர்கள் குதிரைச்சவிக்கைக் கொண்டு தங்கள் உடலை அடித்து கொள்கிறார்கள், மேலும் மக்கள் அனைவரும் அவரின் எளிமையைக,கடுநோன்பைக்,பிராயச்சித்தத்தைக் காண அனைவரும் குழுமிவிடுகின்றனர். மேலும் மிகப் பெரியது என்னவென்றால் தனது உடலையே காயம் ஆக்கிக் கொள்வது ஆகும் — மக்கள் அவர்களை மிகப் பெரிய சாமியார் என கூறிக் கொள்கின்றனர்.

அங்கு தனது கண்களை அழித்துக் கொண்ட சாமியார்களும் இருக்கின்றனர், ஏனெனில் கண் மூலமாகவே அழகு விளிப்படைகிறது, மேலும் ஆசை வளர்கிறது. மற்றும் அவர்கள் தங்களின் கண்களை அழித்துக் கொண்டதால் மதிக்கப் படுகின்றனர். கடவுள் உலகில் உள்ள அழகை கண்டு கொள்ளவே அவர்களுக்கு கண்களை அளித்துள்ளார், அவர்கள் தங்களின் கண்களை அழித்துக் கொள்வதன் மூலம் ஒரு குருடராய் ஆகி விடுகின்றனர்.

அங்கு தனது பொது உறுப்புக்களை வெட்டிக் கொண்ட சாமியார்களை பார்க்க முடிகிறது. மேலும் அவர்கள் மீ அதீத மரியாதையுடன் நடத்தப் படுகின்றனர், மிகச் சிறப்புடன், அவர்கள் தன்னைத் தானே அழித்துக் கொண்டதற்காக மட்டுமே மரியாதை செய்யப் படுகிறார்கள், தனக்குத் தானே வன்முறையாலனாக இருப்பதால் மரியாதை செய்யப் படுகிறார்கள். இப்படிப் பட்ட நபர்கள் மன ரீதியாக பாதிப்படைந்தவர்கள். இந்த வகையான சாமியார்கள் மிக நீண்ட நோன்பு நோற்க முடிவதால் அவர்கள் வணங்கப் படுகின்றனர், பட்டினியாய் கிடப்பதில் கைதேர்ந்தவர்கள் அவர்கள். இது விதமான கைதேர்தல் ஆகும். இதற்க்கு அதி புத்திசாலித்தனம் ஒன்றும் தேவை இல்லை; மிகச் சாதரமான பயிற்சி மட்டுமே போதுமானது முட்டாள் தனமனவர் கூட இதைச் செய்திட அல்லது கற்றுக் கொள்ள முடியும். இதனைச் செய்ய நீங்கள் துன்பமாய் இருப்பதை அனுபவிக்கத் தெரிந்த மனிதராக இருந்தாலே போதுமானது – நோய் குண மனிதர் மட்டுமே வேதனைப்படுதலை களித்திருக்க முடியும். உங்களால் பத்து நாட்கள் சாப்பிடாமல் இருக்க முடியும் என்றால் பதினோன்ராம் நாளும் பட்டினியாய் இருக்க முடியும், முதலில் நான்கு ஐந்து நாட்கள் மட்டுமே கஷ்டமாக இருக்கும். அடுத்து உடலில் வளர்சித மாற்றம் உண்பதை நிறுத்தி விடும், தானாகவே அதை செய்து விடும். உண்மையில் அது தன்னைத்தானே உண்ண ஆரம்பித்து விடும். உடல் தன்னகத்தே இரண்டு விதமான எந்திரவியல் கொண்டு உள்ளது; அவசர தேவைக்காக அது இரண்டு விதமான உணவு முறைகளைக் கொண்டு உள்ளது. நீங்கள் சாபிட்டால் ஆற்றல் வெளியில் இருந்து பெறப் படுகிறது, ஏனெனில் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட அளவு ஆற்றல் தேவைப் படுகிறது. ஒரு வேளை நீங்கள் சாப்பிடா விட்டால் உடல் தன்னகத்தே சில அளவு ஆற்றலை அவசரத் தேவைக்காக தன்னகத்தே கொண்டு உள்ளது, அது கொழுப்பு வடிவில் உள்ளது. கொழுப்பு என்பது அவசரத் தேவைக்கான உணவு ஆகும். ஒரு நபர் ஆரோக்கியமாகவும், சாதாரணமாகவும் இருந்தால் அவரால் சாப்பிடாமல் மூன்று மாதங்கள் இருக்க முட்யும். அந்த அளவு கொழுப்பு அவரது உடல் கொண்டு உள்ளது.

பழங்காலத்தில் மனிதனின் உடல் மரத்தின் அடியில் இருப்பதற்கும், வேட்டையாடி சாப்பிடுவதற்கும் உகந்ததாய் இருந்தது, ஒவ்வொரு நாளுமே உணவு வேட்டையில் கிடைப்பது இல்லை. சில நாட்கள் உணவைப் பெற முடிந்தது, சில நாட்கள் உணவைப் பெற முடியவில்லை. ஆகவே மனிதன் தன் உடலில் சேமிக்க ஆரம்பித்தான், உடலும் அதை கற்றுக் கொண்டது.

அதிக பட்ச பயம் என்னவென்றால் நாளையை நோக்கித்தான் இருக்கிறது, ஆகவேதான் அதிகபடியான கொழுப்பு தேவைப் படுகிறது. ஆகவேதான் பெண்கள் அதிகமாக கொழுப்பை சேமிக்கின்றார்கள். கற்காலம் என்பது மிக அதிக பயம் கொண்டது ஆகும் — அவர்கள் ஆண்களினாலும் பயப்பட ஆரம்பித்தனர். அவர்கள் அதிக கொழுப்பை சேமிக்க ஆரம்பித்தனர். மற்றும் பெண்கள் ஆண்களை விட அதிக அளவு சாப்பிடாமல் இருக்க முடியும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்; பெண்களுக்கு அதிக அளவு கொழுப்பு தேவைப் படுகிறது ஏனெனில் அவர்கள் கர்ப்ப காலத்தில் அவர்களுக்கு சாப்பிடுவது என்பது கஷ்டகரமான விஷயம் என்பதாலும் கூட. அந்த சமயங்களின் அவர்களின் சேமித்து வைக்கப் பட்ட உணவை உடல் உண்டு கொள்கிறது. உண்மை என்னவென்றால் நோன்பு என்பது உங்களை நீங்களே உண்டு கொள்வது ஆகும், நரமாமிசம் உண்ணிகள் ஆகும். மறைக்கப் பட்ட உண்மை என்னெவென்றால் நோன்பு இருக்கின்றவர்கள் நரமாமிசம் உண்பவர்கள் ஆவர், அவர் அவரையே உண்டு கொள்கிறார். ஆகவேதான் நோன்பின் போது ஒவ்வொருநாளும் இரண்டு பவுண்டு எடை நோன்பின் போது உடலில் இருந்து குறைகிறது. அது எங்கு செல்கின்றது? நீங்கள் அதை உண்டு விடுகிறீர்கள். அது உங்களின் தேவை, ஒவ்வொருநாள் தேவையும் ஆகும். அந்த அளவு ஆற்றல் உங்களின் இயந்திரம் தினசரி வேலை செய்ய தேவைப் படுகிறது.

பெரிய பெரிய சாமியார்கள் அனைவரும் மிக நெடிய நோன்பை செய்ய முடிகிறது. அவர்களின் உடலை அவர்கள் சித்திரவதை செய்து கொள்கிறார்கள். ஆனால் இது ஒன்றும் புத்திசாலித்தனமான விஷயம் ஒன்று அல்ல. சில நாட்கள் அல்லது சில வாரங்கள் மட்டுமே சாப்பிடாமல் இருப்பது என்பது கடினம், இரண்டாவது வாரம் இது ஒரு சுலபமான காரியம் ஆகி விடும், மூன்றாவது வாரம் சாப்பிடுவது என்பது கடினம் ஆகி விடும். நான்காவது வாரம் சாப்பிடுவதை மறந்து இருப்பீர்கள். உடல் தன்னைத்தானே உண்டு கொள்வதை விரும்பி களித்திருக்க ஆரம்பித்து விடும், உடலின் எடை மிக எளிதாக உணரப் படும், உண்மையாகவே செரிமானம் செய்யும் கடினம் கூட அதற்கு இருப்பதில்லை. மேலும் அனைத்து ஆற்றலும் உபயோகம் செய்யப்படும், மூளை செரிமானத்திற்காக வேலை ஏதும் செய்ய வேண்டியது இல்லை, உன்னால் அதிக அளவு கவனம் செலுத்த முடியும், நீ உடலையும் அதன் தேவையையும் மறந்து முற்றிலும் விடுவாய்.

ஆனால் மேற்கண்டவைகள் அனைத்தும் துக்ககரமான மனிதர்களையும், துக்ககரமான சமுதாயத்தையுமே உண்டாக்குகின்றன. உங்களுடைய துக்கத்தினுள் சென்று பாருங்கள் அங்கு உங்களால் சில உண்மைகளை கண்டு கொள்ள முடியும்.

ஒன்று: அது உங்களுக்கு மரியாதையைக் கொடுக்கிறது. உங்களிடம் மக்கள் நட்புணர்வாய், இருக்கின்றனர், மேலும் அதிக இறக்கம் உங்களிடம் கொண்டவர்களாய் இருக்கின்றனர். இது ஒரு வேடிக்கையான உலகம், நீங்கள் அதிக நண்பர்களை கொண்டு இருகிறீர்கள் என்றால் நீங்கள் மிகவும் துக்ககரமான மனிதர் என்பதை புரிந்து கொள்ளுங்கள். இந்த வேடிக்கையான உலகில் எதோ ஒரு மிக அடிப்படையிலேயே தவறாக உள்ளது எனலாம். அப்படி இல்லை எனக் கொண்டால், மகிழ்ச்சிகரமான மனிதர்களே அதிக நண்பர்களை கொண்டு இருக்க வேண்டும்? ஆனால் உண்மையில் அப்படி எதுவும் இருப்பதில்லை. மகிழ்ச்சியான மனிதர்கள் நண்பர்களை கொண்டு இருப்பதில்லை, ஆனால் அவர்கள் அவர்களின் மீது பொறாமை கொள்ள ஆரம்பித்து விடுகின்றனர்; அவர்கள் தாங்கள் மகிழ்ச்சியான நபரால் ஏமாற்றப் பட்டோம் என்று எண்ணுகிறார்கள், அதாவது மகிழ்ச்சியான நபர் எதோ ஒன்றை கொண்டு உள்ளார், பிறரிடம் இல்லாத ஒன்று; அதுவே அவரின் மகிழ்ச்சி ஆகும். ஏன் மகிழ்ச்சியாய் நீ இருக்கின்றாய் என கேள்விகளை கேட்கின்றனர். ஆகவே கடந்த காலங்களின் சில விசயங்களை நமக்கு சொல்லிக் கொடுத்து உள்ளனர், மகிழ்ச்சியை அமுக்கி வைத்தல், துக்கத்தை வெளிக் கொணரவும் கற்றுவிக்கப் பட்டு உள்ளோம், இந்த பாவனை நமது இயற்கையாக ஆகியும் விட்டது.

துக்கம் முன்னிலையில் மகிழ்ச்சி ஓஷோ கருத்துரை:[தொகு]

ஆனால் என்னுடைய சந்நியாசிகள் இந்த அனைத்துவிதமான முறைகளையும் விட்டு விட வேண்டும். நீங்கள் எப்படி மகிழ்வாய் இருப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும், மகிழ்வான மனிதர்களை எப்படி மரியாதையாக நடத்த வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும், மேலும் மகிழ்வான மனிதர்களின் மீது அதீத கவனம் எப்படி செலுத்துவது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும், இதுவே மனித இனத்திற்கு செய்யும் பெரிய சேவையாகும். அதிகமாய் இரக்கம் கொள்ளவேண்டாம் துக்ககரமான மனிதர்களைப் பற்றி. யாரேனும் துக்கமாய் இருந்தால் அவர்களைப் பற்றி பரிதாபம் கொள்ள வேண்டாம், உதவுங்கள் ஆனால் பரிதாபம் கொள்ளாதீர்கள். அவர்களுக்கு எந்தவிதமான கருத்துக்களையும் கொள்ளாதீர்கள், இதுவே அவர்கள் துக்கம் பற்றி தவறான கருத்தை உருவாக்கி விடும். நீங்கள் அவர்களுக்கு மிகச் சரியான வழியில் உதவி செய்கிறீர்கள் என்பதை அவர்கள் அறிந்து கொள்ள உதவி செய்யுங்கள், ஆனால் அது ஒன்றும் அவர்களுக்கான மரியாதை – - கொடுத்தல் என்பது மிக எளிதாக அவர் மீது நீங்கள் கொண்ட பரிதாபம் யன்றி வேறு ஒன்றும் இல்லை – இல்லை என்பதை உணருங்கள். நீங்கள் எந்த ஒரு உதவியும் அவருக்கு துக்கத்தில் இருந்து வெளிவர செய்யவில்லை என்பதை மனதில் கொள்ளுங்கள், ஏனெனில் துக்கம் என்பது அழுக்கடைத்து உள்ள உணர்வு ஆகும். அவருக்கு துக்கம் என்பது அழுக்கடைந்தது என்பதை உணர்த்துங்கள், அவர் ஒன்றும் துக்கத்தின் மூலம் உலகிற்கு மாபெரும் சேவை ஒன்றும் செய்யவில்லை என்பதை உணர அவருக்கு உதவுங்கள்.

மகிழ்ந்திரு, மகிழ்வை மதித்திடு , மகிழ்ச்சி என்பதே வாழ்வின் நோக்கம் என்பதை மக்கள் உணரும்படி அவர்களுக்கு உதவிடு — சச்சிதானந்தா. கிழக்கத்திய மதங்கள் கடவுள் மூன்று தகுதிகள் கொண்டு இருப்பதாக சொல்கின்றன.அவர் அமர்ந்து உள்ளார்: உண்மையில், வாழ்வில். அவர் கட்டமைப்பில் உள்ளார்: மனசாட்சியில், விழிப்பில், மேலும் அவர் ஆனந்தமயமாய்: ஆசிர்வாதத்தில் உள்ளார். எங்கெல்லாம் ஆசிர்வாதம் இருக்கிறதோ அங்கெல்லாம் அவர் இருக்கிறார்.எப்பொழுதெல்லாம் ஆசிர்வதிக்கப்பட்ட மனிதரை பார்கிறிர்களோ, அவரை மதித்திடுங்கள், அவர் தெய்வீகமானவர். எங்கு எல்லாம் ஆசிர்வாதம் குழுமி இருக்கிறதோ அந்த இடத்தை கொண்டாடுங்கள், அது ஒரு புனிதமான இடம்.

நாம் முற்றிலும் புதிய மொழியை கற்று இருப்போம், இது மட்டுமே மனித இனத்தின் முன்னேற்றத்திற்க்கு உதவிடும். நாம் ஆரோக்கியத்தின்,முழுமையின், மகிழ்வின் மொழியை கற்கப் போகிறோம். இது ஒரு கடினமான காரியம் ஆகும், ஏனெனில் நமது முதலீடுகள் மிகப் பெரியவை.

தர்சன் ஏன் மகிழ்ச்சியாய் இருப்பது கடினமாகவும் துக்கமாய் இருப்பது எளிதாகவும் இருக்கிறது. மேலும் ஒரு விஷயம் என்னவென்றால்: துக்கம் என்பது புத்திசாலித்தனம் தேவை இல்லை, எவரேனும் அதனுள் சென்று விட முடியும். மகிழ்ச்சிக்கு புத்திசாலித்தனம், மேதமைதனம், உருவாக்கும் திறன் தேவைப்படுகிறது. உருவாக்கும் நபர்களே மகிழ்ச்சியாய் இருக்கின்றார்கள். (உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் இதனை மொழியாக்கம் செய்யும் போதுகூட என்னால் மிகவும் மகிழ்வாய் இருக்க முடிகிறது, ஏனெனில் நாம் ஒரு புதிய கட்டுரையை உலகில் இதுவரை வெளி வந்திராத கட்டுரையை தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டு இருக்கிறோம் அல்லவா?)

மேற்கண்டவற்றை உங்களின் மனதில் மூழ்கி விடும்படு அனுமதியுங்கள்: உருவாக்கும் திறன் படைத்தவர்களே மகிழ்வாய் இருக்கிறார்கள். மகிழ்வு என்பது அதன் அடிப்படையிலேயே உருவாக்கும் திறன் படைத்ததுதான். ஏதாவது ஒன்றை உருவாக்குங்கள். நீங்களும் மகிழ்வாய் இருப்பீர்கள். ஒரு கொல்லைத் தோட்டம் செய்யுங்கள், அதனை மலரும்படி அனுமதியுங்கள், அப்போது ஏதோ ஒன்று உங்களினுள் மலரும். ஒரு ஓவியம் உருவாக்குங்கள் ஏதோ ஒன்று உணகலினுள் வளர்வதை நீங்களே உங்களினுள் உணர்வீர்கள். அந்த ஓவியம் முழுமையடையும் போது நீங்கள் இறுதி தொடுதல்களை உங்களின் தூரிகளின் மூலம் செய்யும் போது, உங்களால் அதே மனிதரை காண முடியாது – ஓவியம் ஆரம்பிக்கும் போது இருந்த மனிதராய் இல்லாமல் ஓவியம் முடியும் போது ஒரு புதிய மனிதராய் ஆகி விடுவீர்கள். நீங்கள் இறுதித் தொடுதல் ஓவியத்திற்கு கொடுக்கும் போது ஏதோ ஒன்றை உங்களினுள் தொட்டு இருப்பீர்கள்.

ஒரு கவிதை எழுதுங்கள், ஒரு பாடலை பாடுங்கள், ஒரு ஆடலை ஆடுங்கள், மேலும் அவற்றில் பாருங்கள்: நீங்கள் மகிழ்ச்சி அடைந்து இருப்பீர்கள். ஆகவேதான் இந்த கம்மூனில் (commune ஓஷோ அவரது ஆஸ்ரமத்திற்க்கு வைத்த பெயர்) உருவாக்குதல் என்பது நமது கடவுளளிடம் நாம் கொள்ளும் வேண்டுதலாக இருக்கப் போகிறது. இந்த கம்யூன் அந்த நபர்கள் சோகத்தையே முகத்தில் வைத்துக் கொண்டு எதுவுமே செய்யாமல் மரத்தின் அடியிலும், குடிசையினிலும் சும்மவாக இருந்து கொண்டு இருக்கப் போவதில்லை. இந்த கம்யூன் கலைஞர்களுக்கு, ஓவியர்களுக்கு கவிஞர்களுக்கு, சிற்பிகளுக்கு, நடன கலைஞர்களுக்கு,இசையாளர்களுக்கு ஒரு பொதுவிடமாக இருக்கப் போகிறது — மேலும் இன்னும் பல விசயங்கள் செய்யப் போகின்றன.

கடவுள் உன்னை ஒரு உருவாக்கும் திறன் படைத்தவனாக படைத்துள்ளார், வாழ்க்கை என்பது புதிதாக உருவாக்குவது ஆகும், நீ எதையாவது புதிதாக உருவாக்கினால் மகிழ்ச்சியாக இருப்பாய். எந்த நேரமாவது ஒரு குழந்தை அவளின் கருவறையில் வளரும் போது அந்தத் தாயின் கண்களில் இருக்கும் மகிழ்ச்சியைக் கண்டு இருக்கிறாயா? ஒரு பெண் கர்ப்பமாய் இருக்கும் போது அவளிடம் நடை பெரும் மாற்றங்களை கண்டு இருப்பீர்கள் அல்லவா? என்னதான் அங்கு நடை பெறுகிறது? ஏதோ ஒன்று அவளிடம் மலர்கின்றது, அவள் புதிதாய் ஒரு உயிருக்கு பிறப்பை கொடுக்கப் போகிறாள். அவள் ஆனந்தமாய் மகிழ்ச்சியாய் இருக்கிறாள், எல்லையற்ற மகிழ்வினுள் செல்கிறாள், இதுவே அவளின் இதயத்தின் பாடல் ஆகிறது. குழந்தை பிறந்த அச்சமயம், பெண் அந்தக் குழந்தையை முதன் முறையாக பார்க்கிறாள், அப்போது அவளின் கண்களில் இருக்கும் ஆனந்தத்தின் ஆழத்தைக் காணுங்கள், அதில் உள்ளது அவளின் மகிழ்ச்சி. அவள் இந்த மகிழ்வைப் பெறுவதற்காக அதிக அளவு வலியில் இருந்து இருக்கிறாள், அவள் துன்பப் பட்டு இருக்கிறாள், ஆனால் அவளின் துன்பம் அந்த அளவு மதிப்பு மிக்கது ஆகும், இது ஒன்றும் உடலை வருத்திக் கொள்ளும் சாமியார்களின் முறை அன்று, இது ஒரு உருவாக்க முறை ஆகும். அவள் துன்பப்பட்டாள் இந்த மகிழ்வை உருவாக்க அதிக துன்பப் பட்டாள்.

ஒரு செங்குத்தான மலையின் உச்சியைத் தொட நீ மலையேற்றம் செய்கிறாய் என வைத்துக் கொள்வோம். மேலும் மேலே சென்று அடைந்த உடனே படுத்துக் கொள்வாய், மேகங்களுடன் சில ரகசிய வார்த்தைகளை உதிர்ப்பாய், வானை நோக்கி பார்க்கிறாய், அந்த மகிழ்ச்சி முழுவதும் உனது இதயத்தை மூடி விடுகிறது — இந்த மகிழ்ச்சி எப்பொழுதெல்லாம் ஒன்றை உருவாக்குகிறிர்களோ அப்பொழுதெல்லாம் உண்டாகும்.

அறிவாளிகளும் முட்டாள்களும் சமுதாயத் தேவையும்[தொகு]

மகிழ்வாய் இருக்க மேதாவித்தனம் தேவைப்படுகின்றது, மேலும் மக்கள் அனைவருமே முட்டாளாய் இருக்க கற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளனர். இந்த சமுதாயம் அறிவாளிகள் மலர்வதை விரும்புவதில்லை. சமுதாயம் அறிவை விரும்புவதில்லை, உண்மையில் அறிவைப் பற்றி அது மிகவும் பயந்தே உள்ளது. சமுதாயம் முட்டாள் மக்களையே விரும்புகிறது? ஏன்? காரணம் என்னவென்றால் முட்டாள் மக்களை நிர்வகிப்பது சுலபம். அறிவாளி மக்கள் கீழ்படிந்து செல்ல வேண்டிய அவசியம் இல்லை — அவர்கள் கீழ்படியலாம் அல்லது கீழ்ப்படியாமல் இருக்கலாம். ஆனால் முட்டாள் மனிதன்கீழ்ப்படியாமல் இருக்க முடியாது, அவன் எப்போதுமே கட்டளைக்கு உட்பட்டவன், கட்டளையிடளுக்குத் அடிபணிந்தவன். முட்டாள் மனிதன் யாரோ ஒருவர் கட்டளைக்கு காத்துக்கிடக்கிறான், ஏனெனில் அவன் அவனாக வாழ தனது அறிவை உபயோகிக்க முடிவதில்லை. அவன் தன்னை யாரோ ஒருவர் வழிகாட்ட வேண்டுகிறான், அவன் அவனுடைய சர்வதிகாதிரியை தேடிக் கொள்கிறான்.

அரசியவாதிகள் அறிவாளித்தனம் உலகில் நடைபெற விரும்புவதில்லை; சாமியார்கள், போதகரர்கள் அறிவாளித்தனம் உலகில் நடை பெற விரும்புவதில்லை; ஜெனரல்கள், ராணுவ அதிகாரிகள் உலகில் அறிவாளித்தனம் நடை பெற்று விட விரும்புவதில்லை; எவருக்கும் அறிவாளித்தனம் தேவையும் இல்லை. மக்கள் முட்டாளாகவே இருக்க வேண்டும், அடுத்து அனைவருமே கீழ்படிவார்கள், அவர்கள் முட்டாளாகவே இருக்க உறுதிபடுத்தப்பட்டவர்கள், அவர்களின் மடிப்பை விட்டு வெளியில் செல்ல முடியாத முட்டாள்கள் தேவை, அவர்கள் எப்போதும் ஒரு கூடத்தில் ஒரு பகுதியாகவே இருப்பார்கள், அப்படி இருப்பது என்பது கட்டுப்படுத்தக்கூடிய ஒன்றாகும், அதிகாரத்துடன் ஒடுக்க உகந்தவர்கள், மேலும் நிர்வகிக்க தகுந்தவர்கள் ஆவார்கள்.

அறிவாளிகள் கலகக்காரர்கள். அறிவாளித்தனம் என்பது கலகம் செய்வது. சரியா தவறா என்பதை அறிவாளி அவனே முடிவு செய்கிறான். அறிவாளிகள் பழமைவாதிகளாக இருக்க முடிவதில்லை, கடந்த காலத்தை வணங்கப் போவதில்லை, கடந்ததில் எதுவும் வணங்குமளவிற்கு இல்லை. அறிவாளிகள் வருங்காலத்தை உருவாக்க விரும்புகின்றனர், நிகழ்காலத்தில் வாழ விரும்புகின்றனர். நிகழ் காலத்தில் அவர் வாழ்வது, வருங்காலத்தை உருவாக்கவே.

முட்டாள்களும், புத்தி பேதலித்த அரசியல்வாதிகளும்[தொகு]

ஆனால் முட்டாள்கள் பழமைவாதிகள். அவர்கள் ஒரு சாமியாரை பின்பற்ற தயாராய் இருக்கிறார்கள், ஒரு மழுங்கிய அறிவு படைத்த அரசியல் வாதியை பின்பற்ற தயாராய் இருக்கிறார்கள், கட்டளைகளை பின்பற்ற தயாராய் இருக்கிறார்கள், யாரேனும் அதிகார சக்தியுடன் இருந்தால் அவரின் காலில் விழுந்து கிடக்க தயாராய் இருக்கின்றார்கள். அறிவுத்தனம் இல்லாமல் எங்கும் மகிழ்வே இல்லை. அறிவுத்தனத்தின் மூலமே மனிதன் மகிழ்வாய் இருக்க முடியும், முழுவதுமான அறிவாளித்தனம்.தியானம் என்பது உன்னுடைய அறிவாளித்தனத்தை வெளிக்கொணரும் கருவி ஆகும். அதிக தியானம் மூலம் உன்னால் அதிக அறிவாளித்தனத்தை அடைய முடியும். ஆனால் அறிவுதான் மேதாவித்தனம் என்ற அகங்கார அறிவாளித்தனம் ஆகும், நான் இப்படிப் பட்ட அறிவைக் குறிப்பிடவில்லை என்பதை நினைவில் வைத்திருங்கள்.

ஆனால் நான் குறிப்பிடும் அறிவுத்தனம் என்பது முற்றிலும் வேறுபட்டது, அது மண்டையுடன் செய்வதற்கு ஒன்றுமே இல்லை. அறிவுத்தனம் என்பது உங்களுடைய முழு ஆதார மையத்திலிருந்து வருவது ஆகும். அது உன்னுடனேயே நன்றாக இருக்கிறது, அதனுடன் பல விசயங்கள் உன்னுள் வளர உதவி செய்கிறது. நீ மகிழ்ச்சியாய் ஆகி விடுவாய், நீ ஒரு கலகக் காரனாய் ஆகிவிடுவாய், ஒரு சாகசம் செய்பவனாகி விடுவாய், பாதுகாப்பற்ற தன்மையை விரும்ப ஆரம்பித்து விடுவாய், தெரியாத ஒன்றினுள் புகுந்து விடுவாய். நீ அபயகரமானவனாய் வாழ ஆரம்பித்து விடுவாய், ஏனெனில் அந்த வழியே வாழ்க்கைக்கான வழி ஆகும்.

ஒரு சன்னியாசியாய் இருப்பது என்பது வாழ்க்கையை அறிவுப் பூர்வமாய் வாழ ஆரம்பித்து விடுவது ஆகும், அதாவது “நான் அறிவுப்பூர்வமாய் வாழ்வை வாழ்வேன் என்பதும், நான் மற்றவரைப் போன்று வாழ்பவன் அல்ல என்றும், நான் நானாகவே வாழ்கிறேன் என்பதும், நான் என்னுள்ளே வாழ்கிறேன் என்பதும், நான் என்னை விட்டு வெளியில் இருந்து வழி நடத்தவோ, கட்டளையிடப்படவோ இல்லை என்றும் ஏற்றுக் கொள்வது ஆகும். ஆனால் நான் ஒரு மந்தையின் உளவியலின் பகுதி அல்ல அதாவது நான் “நானாகவே நடக்கிறேன்” அதாவது “நான் என்னுடைய பாதையை அறியப் போகிறேன்” அதாவது “உலகின் உண்மையின் / இயற்கை நியதியை என்னுடைய பாதையாக்கிக் கொள்ளப் போகிறேன் ” தெரியாதவற்றினுள் பிரவேசிப்பதன் மூலம் அதனை தெரிந்து கொள்ளப் போகிறேன் என உணர்தலே உங்களின் வழி ஆகும். ஆனால் முன்னமே அந்தப் பாதை என்பது உள்ளது, அதன் வழியே நடப்பதன் மூலம் அதனை உண்டாக்குங்கள்.

முட்டாள்களுக்கு ஏற்கனவே மேம்படுத்தப்பட்ட சிமெண்ட் சாலைகள் இருக்கின்றன, ஆனால் அங்கு மந்தைகளே நகர்ந்து கொண்டு உள்ளன. அதாவது நூறு நூறு ஆண்டுகளாய் அதன் வழியில் நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள் — மேலும் தற்போதும் நகர்ந்து கொண்டு இருக்கிறார்கள், அந்த வட்டத்தின் வழியில்தான். மேலும் தனிமையில் இருப்பதை விட பல மனிதர்களுடன் இருக்கும் போது பாதுகாப்பாய் இருக்கின்றனர் என முட்டாள் உணர்கிறான். அறிவுத்தனம் உனக்கு தனிப்படவனாய் இருப்பதற்கு தைரியத்தைக் கொடுக்கிறது, அது உருவாக்குபவனாய் எப்படி இருப்பது என்பதைத் தருகிறது. மிகப் பெரும் ஆர்வத்தை மிகப் பெரும் கண்ணோட்டத்தை தருகிறது. அதன் விளைவாக மகிழ்ச்சியில் ஆசிர்வாதத்துடன் பயணிக்கிறாய்.

Source – Osho Book “The Book of Wisdom”