குழந்தைப் பாடல்கள்/சுண்டெலிக் கல்யாணம்

விக்கிநூல்கள் இலிருந்து

அப்பாப் பையன் மகன்

சுப்பாக்குட்டி


சுப்பாக்குட்டி பிள்ளை

சுண்டெலியாம்


சுண்டெலி ராசனுக்குக்

கல்யாணமாம்


சொளத்தட்டுப் பல்லாக்கு

ஊர்கோலமாம்.


பாம்பைக் கூப்பிடுங்கள்

பல்லாக்குத் தூக்கட்டும்


பல்லியைக் கூப்பிடுங்கள்

பராக்குப் பார்க்கட்டும்


தவளையைக் கூப்பிடுங்கள்

தாரை ஊதட்டும்


சேவலைக் கூப்பிடுங்கள்

கொம்பு முழங்கட்டும்


பாடல் -2[தொகு]

சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும்

கல்யாணமாம்

பூலோகமெல்லாம்

கொண்டாட்டமாம்

ஓரெலி ஓடிவந்து

ஊருக்கெல்லாம் சொல்லிச்சாம்

இரண்டெலி ஓடிவந்து

ரத்திணக் கம்பளம் போட்டுச்சாம்

மூவெலி ஓடிவந்து

முக்காலி போட்டுச்சாம்

நாலெலி ஓடி வந்து

நாதசுரம் ஊதிச்சாம்

ஐந்தெலி ஓடிவந்து

மஞ்சளை அரைச்சதாம்

ஆறெலி ஓடிவந்து

ஆட்டமாய் ஆடிச்சாம்

ஏழெலி ஓடி வந்து

ஏணி மேலே ஏறிச்சாம்

எட்டெலி ஒடி வந்து

எட்டி எட்டி பார்த்துச்சாம்

ஒன்பதெலி ஓடி வந்து

ஒய்யாரமய் நின்னுச்சாம்

பத்தெலி ஓடிவந்து

பணியாரம் தின்னுச்சாம்