குழந்தைப் பாடல்கள்/தவளையார்

விக்கிநூல்கள் இல் இருந்து
Jump to navigation Jump to search

தத்தித் தத்தித் தவளையார்

தாவித் தரையில் பாய்கிறார்

கத்திக் கத்தி இரவெல்லாம்

கண்ணை விழித்துப் பாடுகிறார்



கிட்டே பாம்பு வந்ததும்

எட்டி அஞ்சி ஓடுகிறார்

அருகில் நீரைப் பார்த்ததும்

எகிறித் தாவிக் குதிக்கிறார்.