செடிகள் கொடிகள் மரங்கள்/செடிகள்/ஆவாரை

விக்கிநூல்கள் இலிருந்து

இதை யாரும் பயிர் செய்வது இல்லை.சாலை ஓரங்களிலும் காடுகளிலும் தானாகவே முளைத்துக் கிடக்கும்.இரண்டு அல்லது மூன்று அடி உயரத்திற்கு மேல் வளர்வது இல்லை.இதன் பூக்கள் மஞ்சள் நிறம் கொண்டவை.இதன் தண்டு துவர்ப்புச் சுவை கொண்டது.இதன் பூக்களைப் பறித்து சமைப்பது உண்டு.சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் என்பாரும் உண்டு."ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டீரோ" என்ற சொல்வழக்கு இதன் பெருமையை உணர்த்தும்.