வெகுளாமை

விக்கிநூல்கள் இலிருந்து

திருக்குறள் > துறவறவியல்



301. செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துச்
காக்கின்என் காவாக்கால் என்?


302. செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்அதனின் தீய பிற.


303. மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
பிறத்தல் அதனான் வரும்.


304. நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.


305. தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லுஞ் சினம்.


306. சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச் சுடும்.


307. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.


308. இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை நன்று.


309. உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி எனின்.


310. இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை.


"https://ta.wikibooks.org/w/index.php?title=வெகுளாமை&oldid=11548" இலிருந்து மீள்விக்கப்பட்டது