1-ஆந் திருமொழி - வாக்குத்தூய்மை
Jump to navigation
Jump to search
|
--வெ.ராமன் 09:01, 31 மே 2006 (UTC) வாக்குத்தூய்மை எண்சீர்க்கழிநெடிலடியாசிரியவிருத்தம் வாக்குத் தூய்மை யிலாமை யினாலே மாதவா!உன்னை வாய்க்கொள்ள மாட்டேன் நாக்கு நின்னை யல்லால் அறியாது நானதஞ்சுவன் என்வசமன்று* மூர்க்குப் பேசுகின் றானிவனென்று முனிவாயேலும் என்நாவினுக்கு ஆற்றேன்* காக்கை வாயிலும் கட்டுரை கொள்வர் காரணா! கருளக் கொடியானே. 1 சழக்கு நாக்கொடு புன்கவி சொன்னேன் சங்கு சக்கர மேந்து கையனே!* பிழைப்பராகிலும் தம்மடியார்சொல் பொறுப்பது பெரியோர் கடனன்றே* விழிக்கும் கண்ணிலேன் நின்கண் மற்றல்லால் வேறொருவ ரோடுஎன் மனம்பற்றாது உழைக்குஓர் புள்ளி மிகையன்று கண்டாய் ஊழி யேழுல குண்டுமிழ்ந்தானே. 2 நன்மை தீமைக ளொன்றும் அறியேன் நாரணா என்னும் இத்தனை யல்லால்* புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப் புகழ்வானன்று கண்டாய் திருமாலே!* உன்னுமாறு உன்னை ஒன்றும் அறியேன் ஓவாதே நமோநாரணா! என்பன்* வன்மையாவது உன்கோயிலில் வாழும் வைட்டணவ னென்னும் வன்மை கண்டாயே. 3 நெடுமையால் உலகேழு மளந்தாய்! நின்மலா! நெடியாய்! அடியேனைக்* குடிமை கொள்வதற்கு ஐயுற வேண்டா கூறைசோறு இவைவேண்டுவ தில்லை* அடிமை யென்னுமக் கோயின் மையாலே அங்கங்கே அவைபோதரும் கண்டாய்* கொடுமைக் கஞ்சனைக் கொன்று நின்தாதை கோத்தவன் தளைகோள் விடுத்தானே! 4 தோட்டம் இல்லவள்ஆத் தொழுஓடை துடவையும் கிணறும் இவையெல்லாம்* வாட்டமின்றி உன்பொன்னடிக் கீழே வளைப்பகம் வகுத்துக் கொண்டிருந்தேன்* நாட்டு மானிடத் தோடுஎனக்கு அரிது நச்சுவார் பலர் கேழலொன்றாகி* கோட்டுமண் கொண்ட கொள்கையினானே! குஞ்சரம் வீழக்கொம் பொசித்தானே! 5 கண்ணா! நான்முகனைப்படைத்தானே! காரணா! கரியாய்! அடியேன்நான்* உண்ணாநாள் பசியாவதொன் றில்லை ஓவாதே நமோநாரணா வென்று* எண்ணா நாளும் இருக்கெச் சாம வேதநாண் மலர்கொண்டு உன்பாதம் நண்ணாநாள்*அவை தத்துறு மாகில் அன்றுஎனக்கு அவைபட்டினி நாளே. 6 வெள்ளை வெள்ளத்தின் மேல்ஒரு பாம்பை மெத்தையாக விரித்து* அதன்மேலே கள்ள நித்திரை கொள்கின்ற மார்க்கம் காணலாங்கொல் என்றாசை யினாலே* உள்ளம் சோரஉகந் தெதிர்விம்மி உரோம கூபங்களாய்* கண்ணநீர்கள் துள்ளம் சோரத் துயிலணை கொள்ளேன் சொல்லாய் யான்உன்னைத் தத்துறுமாறே. 7 வண்ணமால் வரையே குடையாக மாரி காத்தவனே! மதுசூதா!* கண்ணனே! கரிகோள் விடுத்தானே! காரணா! களிறட்ட பிரானே!* எண்ணுவாரிடரைக் களைவானே! ஏத்தரும் பெருங்கீர்த்தியினானே!* நண்ணிநான் உன்னை நாள்தொறும் ஏத்தும் நன்மையே அருள்செய் எம்பிரானே! 8 நம்பனே!நவின்றேத்த வல்லார்கள் நாதனே! நரசிங்கமதானாய்!* உம்பர் கோனுல கேழும் அளந்தாய் ஊழியாயினாய்! ஆழி முன்னேந்தி* கம்பமாகரி கோள்விடுத்தானே! காரணா! கடலைக் கடைந்தானே!* எம்பிரான்!என்னை யாளுடைத்தேனே! ஏழையேனிடரைக் களையாயே. 9 காமர்தாதை கருதலர் சிங்கம் காணவினிய கருங்குழல் குட்டன்* வாமனன் என்மரகத வண்ணன் மாதவன் மதுசூதனன் தன்னை* சேமநன்கமரும் புதுவையர்கோன் விட்டுசித்தன் வியன்தமிழ் பத்தும்* நாமமென்று நவின்றுரைப்பார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணனுலகே. 10 பெரியாழ்வார் திருவடிகளே சரணம்