பூனைக்குடும்ப விலங்குகள்/சிங்கம்
சிங்கங்கள் ஆப்பிரிக்க காட்டின் பிரதானமான அடையாளங்கள் ஆகும் .ஆப்பிரிக்காவில் அவற்றின் பலத்துக்காகவும் அழகுக்காகவும் நீண்ட காலமாக மரியாதை செய்யப்பட்டு வருகின்றன.பெரிய கூட்டங்களாக வாழும் ஒரேயொரு பூனைப்பேரின விலங்கும் சிங்கம் மட்டுமே ஆகும்.மேலும் அதிக சத்தமாக கர்ச்சிக்கும் பூனைப்பேரின விலங்கும் இதுவே.அதன் கர்ச்சிப்பு 5 மைல்கள் வரை கேட்க்கும் !
சிங்கங்கள் எங்கே வாழ்கின்றன ?
[தொகு]
காடுகளின் ராஜா என்று சிங்கம் அழைக்கப்பட்டாலும் அது உண்மையில் காடுகளில் வசிப்பதில்லை . சமதரையான சவானா புல்வெளிகளிலே அவை வாழ்கின்றன .சவானாவில் அவை குறிப்பிட்ட இடங்களில் விரும்பிவாழ்கின்றன.பண்டைய காலத்தில் ஏறத்தாழ எல்லா கண்டங்களிலும் சிங்கங்கள் வாழ்ந்தன.இன்று பெரும்பாலும் மத்திய மற்றும் தெற்கு ஆப்பிரிக்காவிலேயே காணப்படுகின்றன.ஆசியா கண்டத்தில், இந்தியாவிலுள்ள கிர் தேசிய பூங்காவில் மட்டும் சிறிய எண்ணிக்கையில் காணப்படுகின்றன.மக்கள் இன்றும் விலங்குகளின் ராஜாவாக சிங்கங்களை கருதுகின்றனர் .
சிங்கங்கள் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்
[தொகு]
சிங்கங்கள் மஞ்சள்ப்பழுப்பு நிற உரோமத்தை கொண்டுள்ளன .அவை 10 அடி (3 மீற்றர் ) நீளம் வரையும், 4 அடி (1.2 மீற்றர் ) உயரம் வரையும் வளர்கின்றன.ஆண்சிங்கங்கள் பெண்சிங்கங்களை விட எடை கூடியவை.ஆண்சிங்கங்கள் 5 மனிதர்களின் எடையை அல்லது சுமார் 550 பௌவுண்ட் (250 கிலோகிராம் ) எடையை கொண்டிருக்கும். ஒல்லியான பெண்சிங்கம் ஒன்றே சுமார் 400 பௌவுண்ட் (180 கிலோகிராம் ) எடையை கொண்டிருக்கும் .
ஆண்சிங்கத்தை அதனுடைய பிடரி முடியை வைத்து இனங்காண முடியும்.பிடரி முடிதலையை சுற்றியும் கீழாகவும் இருக்கும். சில சிங்கங்களுக்கு பிடரிமுடி வயிற்றுப்பகுதி வரை பரந்து காணப்படும்.ஆண், பெண்ணை தோற்றத்தில் எளிதில் வேறுபடுத்தக்கூடிய உருவ வேற்றுமைகள் சிங்கங்களை போல ஏனைய பூனைப்பேரின விலங்குகளில் காணப்படுவதில்லை.
ஆண்,பெண் சிங்கங்களின் வாலின் கடைசியில் ஒரு தனித்துவமான முடிச்சு உள்ளது, இது மற்ற எந்த பூனைகளுக்கும் கிடையாது. ஒரு ஆண் சிங்கத்தின் வாலை தொட்டால் , அந்த முடிச்சுக்குள் ஒரு கூர்மையான எலும்பு மறைந்திருப்பதை உணரமுடியும். ஒரு பழைய புராணத்தில் சிங்கங்கள் சண்டையிடுவதற்கு முன்பு தங்களை ஆவேசமடைய செய்ய இந்த வால்முனையை பயன்படுத்தின என்று கூறப்படுகிறது.
சிங்கங்களின் கூட்டம் எப்படி இருக்கும் ?
[தொகு]சிங்கங்கள் கூட்டமாக வாழும் சமூகப்பிராணிகள் ஆகும் .பெரிய சமூகங்களாக வாழும் ஒரே பூனைகுடும்ப உறுப்பினரும் இவையே .சிங்க கூட்டத்தில் வளர்ந்த ஆண்,பெண் சிங்கங்களும் குட்டிகளும் காணப்படும் . ஒன்று முதல் மூன்று வரையான வளர்ந்த ஆண்சிங்கங்கள் கூட்டத்தில் இருக்கும். அவை ஒன்றுக்கொன்று தொடர்புடைய உறவினர்களாக இருக்கும் . வளர்ந்த பெண்சிங்கங்களும் குட்டிகளும் மொத்தமாக முப்பது வரை காணப்படும் . பெண்சிங்கங்கள் தம்மிடையே நெருங்கிய உறவுடையனவாக இருக்கும் .அவை சகோதரிகளாகவும் ,மகள்களாகவும் உறவு முறையை கொண்டிருக்கும் . சிங்ககூட்டங்கள் ஓநாய் ,நாய் மற்றும் சிங்கங்களை போல இயல்புடைய ஏனைய விலங்குகளின் கூட்டங்களை போலவே செயற்பாட்டை கொண்டிருக்கும் . எனினும் ஏனைய பெரிய பூனை இனங்கள் கூட்டமாக வாழ்வதில்லை.சிங்கங்களின் கூட்டம் அதன் இரைகளின் வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றன .
ஆண் சிங்கம் பெண் சிங்கத்தை விட மிக வலிமையானது.இது அவற்றை மிகச்சிறந்த பாதுகாவலர்களாக ஆக்குகின்றது.பெண்சிங்கங்கள் கூட்டமாக வேட்டைக்கு செல்லும் போது கழுதைப்புலி போன்ற விலங்குகளால் சிங்கக்குட்டிகள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும்.அப்போது ஆண் சிங்கங்களே பாதுகாப்பாக இருக்கும்.ஆண்கள் வலிமையான தசைகளையும் ,சண்டையிடும் ஆற்றலையும் பயன்படுத்தி எதிரிகளை துரத்தி தமது நிலப்பரப்பை காப்பாற்றும்.சிலசந்தர்பங்களில் ஏனைய சிங்கங்களே அவற்றின் எதிரிகளாக அமையும் . சிங்கக்குட்டிகளை தாய் சிங்கங்கள் மட்டுமின்றி ஏனைய வளர்ந்த பெண்சிங்கங்களும் பாதுகாக்கும். பொதுவாக ஒரு குட்டி அனாதையாகும் போது அதற்கு உறவாக இருக்கும் பெண்சிங்கங்கள் அதை பராமரிக்கும்.குறிப்பாக சிறியதாய் , பெரியதாய் அத்தை மற்றும் வளர்ந்த பெண் சகோதரிகள் அக்குடியை பராமரிக்கும் .
sciencedirect.com யிலுள்ள ஆய்வின் அடிப்படையில் "ஆண்சிங்கங்கள் அதிகளவில் வெற்றிகரமாக வேட்டையாடும் வேட்டையாடிகள் ஆகும். எல்லா ஆண்சிங்கங்களும் குறிப்பாக எல்லைப்பரப்பற்ற சிங்ககளும் எருமை மாடுகளை தமது பிரதான இரையாக கொண்டுள்ளன. இதற்கு எதிர்மாறாக பெண்சிங்கங்கள் அதிகளவில் காணப்படும் காட்டுமான் போன்ற குழம்பிகளையே பெரிதும் வேட்டையாயாடுகின்றன."ஆண் மற்றும் பெண் சிங்கங்கள் வேட்டையாடும் புகைப்படங்களை இந்த வலைத்தளத்தில் (http://www.laocomics.com/blog/category/animals/.) காணலாம்.
இளம் ஆண்சிங்கங்கள் ஒரு வயதை அடையும் போது கூட்டத்திலுள்ள வளர்ந்த ஆண்சிங்கங்களால் துரத்திவிடப்படும் . தலைமை ஆண்சிங்கம் முதிர்ந்து தளர்வாக இருப்பின் சில சந்தர்ப்பங்களில் இளம் சிங்கம் தனியாகவோ அல்லது அதன் சகோதரர்களின் உதவியுடனோ கூட்டத்தின் தலைமை பொறுப்பை தட்டிப்பறிக்கும்.துரத்தப்படும் இளம் சிங்கங்கள் மிகவும் கொடூரமானதாக இருக்கும் .அவை தனியாகவோ அல்லது கூட்டமாகவோ திரியும்.பெரும்பாலான கூட்டங்கள் சகோதரர்களே இணைத்து காணப்படுவர்.இவை கழுதைப்புலி,நரி போன்ற சிறிய வேட்டையாடிகள் வேட்டையாடிய இரைகளை அவற்றை துரத்திவிட்டு உண்ணும். ஒருசிங்க கூட்டத்தை கைப்பற்றி தலைமையேற்கும் வரை துரத்தப்படட சிங்கங்கள் தாமாகவே வேட்டையாடவேண்டியுள்ளது
சிங்கங்கள் எதை உண்ணும்?, அவற்றின் இரையை எப்படி வேட்டடையாடும்
[தொகு]
வனப்புமிக்க சிறுமான்,மறிமான்,வரிக்குதிரை,வெள்ளை-தாடி காட்டுமான்,ஒட்டகச்சிவிங்கி மற்றும் எருமை போன்ற பெரிய இரைகளை சிங்கங்கள் உண்ணும்.எல்லா வளர்ந்த சிங்கங்களும் இணைந்து வேட்டையாடும் போது மாத்திரமே யானைகளை வேட்டையாடுகின்றது.பசியோடு உள்ள சிங்கங்களை பார்த்து யானையே பயப்படும் . உணவு பற்றாக்குறை வரும்போது சிங்கங்கள் சிறிய இரைகளை வேடையாடுவதுடன் வேறு மிருகங்கள் வேடையாடியதையும் உண்ணும் .
பெரும்பாலான இரைகளால் சாதாரணமான ஒரு சிங்கத்தை விட மிக வேகமாக ஓட முடியும்.அதனால் சிங்கங்கள் தமது கூடத்தை ஒழுங்காக ஒழுங்கமைத்து ,இரைகளை மெதுவாக பின்தொடர்ந்து அணுகி வேட்டையாடுகின்றது.இரைகளை முதலில் சுற்றிவளைக்கும்.பின்னர் உயரமான புற்களிலிருந்து சடுதியான தாக்குதலை வெளிப்படுத்தும்.சிங்கங்கள் வாழும் பகுதிகளில் உள்ள புற்கள் பச்சையாக குட்டையாக இருக்காது அவை பெரும்பாலும் மிகஉயரமாகவும் இளங்கபிலநிறமுடையதாகவும் இருக்கும்.சிங்கங்களின் உரோமமும் புற்களின் நிறத்தையொத்து இருப்பதால் ஏனைய விலங்குகளுக்கு அவற்றை காண்பது கடினமாகிறது.இவ்வாறு நிறங்களின் காரணமாக ஒரு பொருளோ விலங்கு மறைந்து இருக்கும் உத்தி "உருமறைப்பு " என்று அழைக்கப்படுகின்றது.
பெண் சிங்கங்கள் பெரும்பாலான வேட்டைகளை செய்யும்.அவை குழுக்களாக வேட்டையாடினாலும் தேவை ஏற்படின் தனியாகவும் வேட்டையாடும்.ஆண் சிங்கங்கள் பெண்சிங்கங்களை விட சிறந்த வேடையாடிகளாக இருந்தபோதிலும் அவை கூட்டத்தை பாதுகாப்பதிலேயே அதிக கவனம் செலுத்தும்.சிங்கங்கள் இரையை பல மணிநேரமாக பின்தொடர்ந்தாலும் உண்மையான தாக்குதல் சில நிமிடங்களுக்குளேயே இருக்கும்.ஒரு இரையை பிடித்த பின்னர் பெண்சிங்கங்கள் சிறிய அளவிலான கர்ச்சிப்பை மேற்கொள்ளும்.இதன்மூலம் சிங்கக்கூட்டத்தை உணவுஉண்ண அழைக்கும்.முதலில் ஆண் சிங்கங்களும் பின்னர் பெண்சிங்கங்களும் இறுதியில் குட்டிகளும் இரையை உண்ணும் .
பொதுவாக மதியநேர வெயிலின் சூட்டில் இருந்து பாதுகாப்பு பெற அவை இரவு நேரத்திலேயே வேட்டையாடும்.இரவின் மங்கலான வெளிச்சம் இரைகளின் பார்வையில் இருந்து அவற்றை மறைக்கும்.சிங்கங்களுக்கு இருட்டிலும் சிறந்த கண் பார்வை உள்ளது.இதனால் இரவு வேட்டைக்கு எந்த விதமான பாதிப்பும் இல்லை.சிங்கங்களால் ஒருநாளைக்கு 69 கிலோகிராம் மாமிசமும் உண்ண முடியும்!
சுவாரிசிய தகவல்கள்
[தொகு]- ஒரு ஆண் சிங்கத்தின் கர்ச்சனை 5 மைல்கள் வரை கேட்கும்.
- ஒரு சிங்ககூடத்திற்கான வேட்டை நிலப்பரப்பு 8 தொடக்கம் 150 சதுரமைல்கள் வரை காணப்படும் .
- உலகின் மிகப்பெரிய சிங்கம் ஏறத்தாழ 11.8 அடி நீளமும் 900 பவுண்டுகள் வரை எடையும் கொண்டிருந்தது.
- ஒரு இரையை சிங்கங்கள் அரிதாகவே முழுமையாக உண்ணும் .கழுதைப்புலிகளும் கழுகுகளுமே மீதி இரையை உண்ணும் .
- ஒரு சிங்கம் சிறிய தூரங்களுக்கு 50 மைல்/மணித்தியாலம் வேகத்தில் ஓடக்கூடியது.ஒரு பாய்ச்சலில் 30 அடியை விட அதிகமாக பாயக்கூடியது.
- 40 வருடங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்காவில் இருந்த சிங்கங்களின் எண்ணிக்கையில் கால்வாசியே தற்போது உள்ளது .
- ஒரு சிங்கத்தின் கண்பார்வை ஒரு மனிதனின் கண்பார்வையை விட 5 மடங்கு சிறந்தது.ஒரு மைல் இற்கும் தொலைவிலுள்ள இரையின் சத்தத்தையும் அவை கேட்கும்.
- ஒரு சிங்க கூட்டத்துக்கு ஒரு இரையை உண்ண 4 மணித்தியாலங்கள் வரையும் எடுக்க முடியும் .
- பெண்சிங்கங்கள் வேட்டையாடினாலும் ஆண் சிங்கங்களே முதலில் உண்ணும் .
- உணவு உண்ட பின்னர் தாகமான சிங்கம் ஒன்று 20 நிமிடங்கள் வரை கூட நீரை குடிக்கும்.
- சிங்கங்கள் ஒரு காலத்தில் மாஜாஜால விலங்குகளாக கருதப்பட்டு கடவுள்களாகவும் வணங்கப்பட்டன.ஆனால் வீட்டு பூனைகள் சிங்கங்களின் இடத்தை மாற்று செய்தன.குறிப்பாக எகிப்தில் சொல்லலாம்.காரணம் அவை இலகுவாக பராமரிக்கக்கூடியதும் பாதுகாப்பானவையும் என்பதாலேயே.
- ஒரு சிங்கக்கூட்டத்தில் 40 வரையான அங்கத்தவர்கள் இருக்கமுடியும்.அவற்றில் அரைவாசியானவை குட்டிகளாகவும் இளம் சிங்கங்களாகவும் இருக்கும் .
- பெண் சிங்கங்கள் ஒரே கூட்டத்திலேயே வாழ்நாள் முழுதும் இருக்கும்.ஆண் சிங்கங்களே கூட்டத்தில் இருந்து வெளியேற்றப்படும்.
- ஒரு சிங்கம் 36 கிலோகிராம் மாமிசத்தை ஒருநாளில் உண்ணும் .
- ஆண் சிங்கம் வயோதிபத்தை அடையும் போது அதன் பிடரி முடி கொட்டும் வாய்ப்பும் உள்ளது.
- பெரிய பூனைக்குடும்ப விலங்குகளிலேயே சிங்கங்கள் மட்டுமே சமூகமாக வாழ்கின்றன.
- சிங்கங்களால் சிறுத்தையை போல மிக சிறப்பாக மேலே எற முடியாது .
- சிவிங்கிப்புலி போன்ற ஏனைய இரைகொவிகளிடம் இருந்து சிங்கங்களால் இரையை திருட முடியும் .
மேலதிக தகவல்களுக்கு
[தொகு]- Wikipedia: Lion
- http://www.sandiegozoo.org/animalbytes/t-lion.html -கர்ச்சிக்கும் சிங்க சத்தத்தை கேட்க.
- http://www.tigertouch.org/barbary/index.html -வட ஆப்பிரிக்காவின் அரிதான பார்பரி சிங்கங்களை பற்றி கற்க.