இந்த நூல் சிறுவர் நூல்கள் பகுப்பில் வைக்கப்பட்டு உள்ளது. இது சிறுவர்களுக்கு ஏற்ற நூல்; இந்த நூலைத் தொகுக்கும் போது சிறுவர்களின் அறிவுக்கும் அவர்களின் சிந்தனைக்கு எட்டுவனவாக இருக்குமா என்பதை கவனத்தில் கொண்டு எழுத்தர்கள் எழுத வேண்டும் வேண்டும். சிறுவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும், அவர்களுக்கு எவ்வாறு கூறினால் புரியும் என்பதைப் பற்றியும் எழுத்தர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
இத்திட்டத்தில் உருவாக்கப்படும் நூல்களுக்கு பின்வரும் வழிகாட்டுதல்களை பின்பற்றலாம்:
எளிய, இனிய தமிழ் நடை.
கண்ணைக் கவரும் படங்கள் வழியான விளக்கங்கள்.
பெற்றோர்களுக்கான உதவிக் குறிப்புகள்.
சிறுவர்களின் புரிந்துணர்வுத் திறனை வளர்க்கும் விதமான பயிற்சிகள், கேள்விகள்.
கதைகள், விளையாட்டுக்கள், பாடல்கள் வழி பயிற்சி.
இத்திட்டத்துக்காக கட்டற்ற முறையில் படிமங்களைத் தர, படங்களை வரைந்து தர பங்களிப்புகள் மிகவும் வரவேற்கப்படுகின்றன.