விக்கிப்பீடியாவில் பயனர் எப்படி பங்களிக்கலாம்?

விக்கிநூல்கள் இலிருந்து
தமிழ் விக்கிப்பீடியா
கலைக்களஞ்சியம்

வரைவிலக்கணம்
முக்கியத்துவம்
வரலாறு

பயனர் பங்களிப்பு
கட்டுரையாக்கம்
விசமிகள்

IP தடை

விக்கிப்பீடியா பயனர்களால் ஆக்கப்பட்ட ஒரு கூட்டாக்கம். அவரவருக்கு ஏற்ற நேரத்தில், இணையம் மூலம், அவரவருக்கு ஈடுபாடான முறையில் பங்களிக்லாம். விக்கிப்பீடியாவில் இறுக்கமான பணி வேண்டுதல்கள் இல்லை.

கட்டுரையாக்கம்[தொகு]

கட்டுரை எழுதுதல் விக்கிப்பீடியாவில் செய்யக்கூடிய ஓர் அடிப்படை பணி. கட்டுரையை எழுத முன்பு அந்த தலைப்பில் அல்லது அதற்கு ஒத்த தலைப்பில் கட்டுரை உள்ளதா என்று பார்க்கவும். கூகுள் அல்லது விக்கி தேடு பொறியில் போட்டு இதனை உறுதி செய்யலாம். கட்டுரை இல்லாவிட்டால் விக்கி தேடல் பொறி தேடல் முடிவுகள் என்ற பக்கத்துக்குச் செல்லும். அங்கே நீர் தேடிய பக்கம் "கட்டுரைத் தலைப்பு" என்ற கூற்று இருக்கும். கட்டுரைத் தலைப்பு சிகப்பு தொடுப்பில் இருக்கும். அந்தத் தொடுப்பைச் சுட்டினால் அந்தத் தலைப்பினான ஒரு புதுக் கட்டுரைப் பக்கத்துக்குச் செல்லும். அங்கே நீங்கள் உங்கள் கட்டுரையை இட்டு சேமிக்க வேண்டும்.

பத்துப்பாட்டில் தமிழர் குடியிருப்பும் அதன் கட்டமைப்பும் முனைவர் கி.முருகேசன் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை டாக்டர் என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரி காளப்பட்டி சாலை, கோயம்புத்தூர் – 641 048. அலைபேசி: 9751809470, 8072794623 மின்னஞ்சல்: muruganthirukkural@gmail.com

மானுடப் பண்பாடு தமிழரிடம் இருந்துதான் பரிணமித்திருக்க வேண்டும். அதற்கு எடுத்துக்காட்டாகவே திட்டமிட்டு வாழ்வியலை அமைத்துக் கொண்டவர்கள் தமிழர். தங்களுக்குத் தேவையானவற்றை உற்பத்தி செய்து கொள்ளும் ஆற்றல் மிக்கவர்களாகவும் விளங்கினார். இப்படிப்பட்ட மக்களின் வாழ்வியல் அடையாளமாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்று இருப்பிடம். குளிர், மழை, வெயில் முதலிய இடர்பாடுகளிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவும், உடைமைகளையும் பொருள்களையும் வைத்துப் பாதுகாக்கவும், உண்ணவும், உறங்கவும், இன்ப வாழ்வு நடத்தவும் மனிதனுக்கு இருப்பிடத்தின் தேவை அவசியமாகிறது. இதன் பிரதிபலிப்பாக பத்துப்பாட்டு நூல்கள் விளங்குகின்றன என்பதை மெய்ப்பிப்பதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது. தமிழர் குடியிருப்பும் அகழ்வாய்வும் பழந்தமிழர் குடியிருப்புகள் பெரும்பாலும் குடிசைகளாகவே இருந்தன. அக்குடியிருப்புகளும் நிலம் சார்ந்து இயங்கும் தன்மையுடையதாக இருந்தது. “இன்றைய தமிழ்நாட்டில் இருப்பது போன்றே பண்டைத் தமிழகமாகிய குமரி நாட்டிலும் மேற்குத் திசையிலே பெருமலைத் தொடரிருந்தது. அதனால் நிலம் மேற்கில் உயர்ந்தும் கிழக்கில் தாழ்ந்தும் இருந்தன. இந்நிலைமை அறிந்தே குடதிசை மேற்கு என்றும் குணதிசை கிழக்கு என்றும் பெயர் பெற்றன. ஒருவன் மேற்குத் திசையில் இருந்து கீழ்த்திசை நோக்கி வரின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், என்னும் நான்கு நிலமும் முறையே அடுத்தடுத்து இருப்பதைக் காண்பான். இந்நிலையைப் பிற நாடுகளில் காண்பது இயலாத ஒன்று” என ஞா.தேவநேயப்பாவானர் குறிப்பிடுகின்றார் (தமிழர் வரலாற்று பகுதி – 2, ப.10).

இத்தகைய வீடுகள் வட்ட அல்லது சதுர வடிவமானவை. இவற்றின் கூரைகள் இலைதழையாலும் மரத்தாலும் வேயப்பட்டவை ஆகும். சில சமயம் வீட்டினுள்ளும் சில சமயம் வெளியிலும் அடுப்புகள், அம்மிக் குழவிகள் காணப்படுகின்றன. இதனால் காலநிலையைப் பொறுத்தே மனிதன் இவ்வீடுகளின் வெளியே தனது பெரும் பொழுதைக் கழித்துத் தனக்கு அவசியமான பொருள்களை மட்டும் வீட்டினுள்ளே சேகரித்து வைத்தான் என்பதை அறியமுடிக்கிறது. இன்றும் கிராமப் புறங்களில் உணவு தானியங்களை மரத்தில் பரண் அமைத்தும், வெளியிலே தாவரங்களின் தண்டுகளால் மூடிப் பாதுகாக்கும் மரபு உண்டு. இவ்வாறே அக்காலத்திலும் நடைபெற்றன. பழங்கால மனிதன் வாழ்ந்த இடங்களே ஆயுதங்களை உருவாக்கிய இடங்களாகவும் காணப்படுகின்றன. எவ்வாறாயினும் பழைய கற்கால மக்கள் நீர் நிலைகள், ஆயுதங்கள் உற்பத்தி செய்வதற்கான கற்கள் கிடைக்கும் இடங்கள், வேட்டைக்குத் தேவையான மிருகங்கள் மிகுந்து காணப்படும் இடங்கள் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தமது இருப்பிடங்களை அமைத்திருத்தல் கூடும். இவைபற்றிய சான்றுகள் பல தொல்லியல் ஆய்வுகள் மூலம் காணக் கிடைக்கின்றன. இவை யாவும் மண்வீடுகள் ஆகும். இங்கு உணவு உற்பத்திக்குரிய இடங்களிலேயே மக்கள் வாழ்ந்தனர். மேலும், பண்டைக் காலத்தில் ஏற்பட்ட பேரிட்டார்களால் அக்காலக் குடியிருப்புகள் பல அழிந்து போயின என்பதை, “கடலுக்கும் நிலத்திற்கும் இடையே நடைபெற்ற இடையறாத இருபக்க மோதலில் பழங்கால நகரங்கள் விழுங்கப்பட்டுவிட்டன. அந்நகரின் சில பகுதிகள் இன்னமும் புதையுண்டு கிடக்கின்றன என்பதை 1962-ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் அகழ்வாய்வுத் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுப் பயணமும் மற்றும் அகழ்வாய்வுத் திட்டமும் மிகத் தெளிவாக உணர்த்துகின்றன. கடற்கரையோர மேற்பரப்பு அகழ்வாய்வுப் பயணங்கள் பழைமையான குடியிருப்புப் பகுதிகளில் வட்டக் கிணறுகள், மட்பாண்டங்கள், செங்கல் துண்டுகள் மற்றும் உருள் மணிகள் ஆகியன சிதறிக் கிடப்பதைத் தெளிவுப்படுத்துகின்றன. வாணகிரி, நெய்தல் வாசல், கீழையார் ஆகிய மனை இடங்களில் கண்டறியப்பட்டுள்ள வட்டக் கிணறுகள் அவற்றைச் சுற்றியிருந்த மணல்வெளிக் குடியிருப்புகளைக் குறிப்பாக நகரம் அதன் உச்சகட்ட நிலையில் பெருஞ் சிறப்போடு இருந்ததை உணர்த்துகின்றன என்று கார்த்திகேசு. சிவத்தம்பி குறிப்பிடுகின்றார் (பண்டைத் தமிழ்ச் சமூகம், பக்.156-157).

தற்போது நடக்கும் சிவகங்கை மாவட்ட கீழடி அகழாய்வும் பண்டையகால தமிழரின் வரலாற்று பதிவாக விளங்குகின்றது. மானுடச் சமூகத்தின் அனைத்து அடையாளங்களைக் கொண்ட நாகரீகக் குடியிருப்புகள் மற்றும் அங்கு பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்கள் கிடைத்துள்ளதை நன்கறிவோம். ஐவகை நிலம் சார்ந்த குடியிருப்புகள் மலைப் பகுதிகளில் வசித்தோரை குறிஞ்சி நிலத்தவர் என்றும் காட்டுப்பகுதிகளில் குடியிருதோரை முல்லை நிலத்தவர் என்றும் வயல் பகுதிகளில் வாழ்ந்தோரை மருத நிலத்தவர் எனவும் கடல் சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தோரை நெய்தல் நிலத்தவர் என்றும் நிலப் பாகுபாட்டால் வேறுபடுத்தினார். இந்த நாநிலம் மட்டுமின்றி மணல் சார்ந்து, கொடுந்தொழிலுக்கு ஏற்ற நிலப்பகுதியாகப் பாலை நிலத்தவர் வசிக்கும் பகுதியும் உண்டு. இருப்பினும், அந்தந்த நிலத்தவர் செய்த தொழிலுக்கு ஏற்ப அவர்களது குடியிருப்புகள் தொழில் புரியும் இடத்துக்கு அருகிலே அமைந்திருந்தன. தொழில் வாழ்க்கைக்கு உதவின என்றாலும், மனிதனின் உடலுழைப்பைக் கடந்து அமைதியான வாழ்க்கை நடத்த இருப்பிடம் தேவையானதாக இருந்தது. “தங்குவதற்கு வீடு ஒன்று இல்லாமற் போனால், அது மனிதனுடைய உடல் நலத்தைப் பாதிக்கும். மனிதனுடைய நல்லூணர்வுகள் சிதைந்து அவன் ஒரு விலங்காக மாறக் கூடும். இந்த விலங்குணர்ச்சி அவனை ஆட்டிப் படைத்துச் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்து, சமூகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தும்” என வாழ்வியல் களஞ்சியம் குறிப்பிடுகிறது(ப.570). எனவே இருப்பிடம் இன்றியமையாத் தேவையாகின்றது. அதன் மூலமே மனித வாழ்கையின் அத்தியாயம் பரிணமிக்கத் தொடங்குகிறது எனலாம். குறிஞ்சி நிலத்தவர் குடியிருப்பு மாலையும் மலை சார்ந்த இடமுமாகிய குறிஞ்சி நிலத்தில் தினை முதலிய பயிர் வகைகள் விளைவிக்கப்பட்டன. அதனைக் கவர வருகின்ற யானை, பன்றி முதலிய விலங்குகளையும் கிளி முதலிய பறவைகளையும் விரட்டுவதற்காகத் கானவர் உயர்ந்த மரக்கிளையில் பரண் அமைத்துக் கொண்டனர். இதனை, “வேழங் காவலர் குரம்பை யேய்ப்பக் கோழி சேக்குங் கூடுடைப் புதவின்” (பெரும்பாண்.51-52) என்னும் பாடல் அடிகள் மூலம் அறியமுடிக்கிறது. குறிஞ்சி நிலா மக்கள் தினைகளைச் சேகரித்த பிறகு அதனுடைய தாலாலேயே , கொம்புகளை நாட்டு குடில் அமைத்தனர். இச் செயலை, “விருவி வேய்ந்த குறுங்காற் குரம்பைப் பிணையேர் நோக்கின் மனையோன் மடுப்பத்” (குறிஞ்சிப்.153-154) எனக் கபிலர் குறிப்பிடுகின்றார். மேலும், குறிஞ்சி நிலத்தவர் கழிகளை நாட்டுப் புல்லால் வேயப்பட்ட குடில்களில் வாழ்ந்தனர் என்பதை, “வகலு ளாங்கட் கழிமிடைந் தியற்றிய புல்வேய் குரம்பைக் குடிதோறும்” (மலைபடு.438-439) என்னும் பாடல் அடிகள் விளக்குகின்றன. எனவே குறிஞ்சி நிலத்தவர் தினை போன்ற பயிர்களை விளைய வைப்பவர்கள் ஆதலால், அவர்கள் மரத்தின் மேல் இலைதழைகளை அள்ளி வைத்தும் தினைத் தாளால் குடில் வேய்ந்தும் நீண்டு, நெடிது வளர்ந்த புல்களைக் கொண்டும் தங்களது குடியிருப்புகளை அமைத்துக் கொண்டு தொழிற் புரிந்துள்ளமை வெளிப்படுகிறது. முல்லை நிலத்தவர் குடியிருப்பு காடும் காடு சார்ந்த இடத்தினையும் கொண்டது முல்லை நிலமாகும். இந் நிலத்தில் ஆடுமாடுகளை நெறிப்படுத்தி வளர்க்கும் ஆயர் இனமக்கள் வாழ்ந்தனர். இவர்கள் வாழ்ந்த குடியிருப்புகள் வரகுத் தட்டையால் வேயப்பட்டவை. அவ்வீட்டின் முன்கால்களில் ஆட்டுமறிகள் நின்று தழைகளைத் தின்னத்தக்க வகையில் கட்டப்பட்டிருந்தன. அவ்வீடானது சிறு வாயிலினையும் கழிகளால் கட்டப்பட்ட கதவினையும் உடையதாய் இருந்தது. இதன் மேல் வரகுக் கற்றைகளால் வேய்ந்த சேக்கை இருந்தது. இவ்வாறான குடியிருப்புகளில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் ஆட்டுக் கிடாயின் தோல்களையே பாயாகப் பயன்படுத்தித் துயில் கொண்டனர். இச்செய்திகளை, “............................................... மறிய குளக்கரை யாத்த குறுங்காற்குரம்பைச் செற்றை வாயிற் செறிகழிக் கதவிற் கற்றை வேய்ந்த கழித்தலைச் சாம்பி னதளோன் றுஞ்சுங் காப்பி னுதள” (பெரும்பாண்.147-151) என்னும் பாடல் அடிகள் விளக்குகின்றன. ஆயர்களின் குடிசை முற்றத்தில் நெடிய தாம்புகள் கட்டப்பட்டிருந்தன. இவை செம்மறி ஆட்டுடன் வெள்ளாடுங் கிடக்கும் வகையில் காட்டு முள்ளாலான வேலியினை உடையதாக இருந்தன. இதனை, “நெடுந்தாம்பு தொடுத்த குறுந்தறி முன்றிற் கொடுமுகத் துருவையோடு வெள்ளை சேக்கு மிடுமுள் வேலி யெருப்படு வரைப்பி” (பெரும்பாண்.152-154) என்னும் அடிகள் வெளிப்படுத்துகின்றன. மேலும், முல்லை நிலத்துச் சீறூர்களில் வாழ்ந்த உழுதுண்பாரின் இல்லங்கள் வரகு வைக்கோலால் வேயாப்பட்டிருந்தன. இது போன்ற அழகிய இல்லங்களின் முகப்பில் கூலவகைகள் வைக்கப் பெறும் குதிர்கள் இருந்தன. வீட்டின் முற்ற பந்தலில் யானையின் காலை ஒத்த வரகு திரிகை நடப்பட்டிருந்தன. கலப்பையும் உருளைகளும் வைக்கப்படும் கொட்டில் ஒன்றும் இருந்தது. அக்கொட்டிலின் ஒரு பக்கத்தில் எருதுகள் கட்டப்பட்டிருந்தான. இதனை, “பிடிக்கணத் தன்ன குதிருடை முன்றிற் களிற்றுத்தாள் புரையுந் திரிமரப் பந்தர்க் குறுஞ்சாட் டுருளையொடு கலப்பை சார்த்தி நெடுஞ்சுவர் பறைந்த புகைசூழ் கொட்டிற் பருவ வானத்துப் பாமழை கடுப்பக் கருவை வேய்ந்த கவின்குடிச் சீறூர்” (பெரும்பாண்.186-191) என்னும் பாடல் அடிகளைக் கொண்டு அறியமுடிகின்றது. ‘கொட்டில்’ என்பதற்கு, நெடுகக்கட்டி ஒரு பக்கத்திலே அடுப்பெரித்தும் மறுபக்கத்தில் தொழிலொழிந்த நாளில் சகடை, உருளையையும் கலப்பையையுஞ் சார்த்தி, எருதுகளுங் கட்டி நிற்றலின் கொட்டிலென்றார் என நச்சினார்க்கினியார் உரை கூறியுள்ளார். எனவே முல்லை நிலத்தவர் குடியிருப்புகளைப் பெரும்பாலும் வரகு வைக்கோலால் வேய்ந்திருந்தனர். அவ்வாறு வேயப்பட்ட குடிலும் ஆடு கட்டுவதற்கு ஏற்ற வகையில், அதன் முற்றம் அமைந்திருந்தது என்பதை அறியமுடிகிறது.


மருத நிலத்தவர் குடியிருப்பு வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருத நிலமாகும். மருத நிலம் பசுமை நிறைந்த வயல்களும் தோட்டங்களும் தோப்புக்களும் சோலைகளும் நிறைந்து காணப்படும் பகுதியாகும். உழவர் வயல்களைப் பாதுகாப்பதன் பொருட்டு, வரப்புப் பகுதிகளில் புதிய வைக்கோலால் வேயப்பட்ட குவிந்த குடிசை அமைத்தனர். அக்குடியிருப்பின் முற்றத்தில் உழத்தியர் அவல் இடித்துக் கொண்டிருந்தனர். இச்செயலை, “பழஞ்சோற் றமலை முனைஇ வரம்பிற் புதுவை வேய்ந்த கவின்குடி முன்றி லவலெறி யுலக்கைப் பாடுவிறந் தயல்” (பெரும்பாண்.224-226) என்னும் அடிகள் வெளிப்படுத்துகின்றன. மேலும், தென்னந் தோப்புக்களுக்கு இடையே மருதநிலச் சிற்றூர்கள் பல இருந்தன. அவ்வூரில் தென்னை ஓலைகளால் வேயப்பட்ட குடியிருப்புகள் அமைந்திருந்தன. அவ்வாறான வீடுகளின் முற்றத்தில் மஞ்சள் பயிரிடப்பட்டிருந்தது. அக்குடியிருப்புகளுக்குப் பின்னே மணம் மிகுந்த பூந்தோட்டம் இருந்தது. இது மருத நிலத்தின் வளமையைக் காட்டுவனவாக்கும். இதனை, “வண்டோட்டுத் தெங்கின் வடுமடல் வேய்ந்த மஞ்சண் முன்றின் மணநாறு படப்பைத் தண்டலை யுழவர் தனிமனை” (பெரும்பாண்.353-355) என வரும் பாடல் அடிகள் விளக்குகின்றன. எனவே, மருத நிலத்துக் குடியிருப்புகள் பெரும்பாலும் வயல் ஓரங்களில் உள்ள வரப்பு மற்றும் மேட்டு நிலங்களில் அமைந்திருந்தன. அக்குடில்கள் சிறப்பான மரங்களைக் கொண்டு கட்டப்பட்டிருந்தன. சில குடிசைகள் தென்னந் தோப்புக்களில் அமைந்திருந்தன. மருத நிலத்தில் அந்தணர் மற்றும் வலையர் வீடுகளும் இருந்தன. இவ்வீடுகள் அவர்களின் வாழ்க்கைச் சூழலை விளக்குவாதாக அமைந்திருக்கிறது. நெய்தல் நிலத்தவர் குடியிருப்பு கடலும் கடல் சார்ந்து காணப்படும் இடங்களும் நெய்தல் நிலமாகும். இந்நிலத்தவர்கள் மீன் பிடித்தலையே தொழிலாகக் கொண்டவர்கள். தொழிலுக்கு ஏற்ப அவர்களது குடியிருப்புகளும் கடற்கரை ஓரங்களிலே அமைந்திருந்தன. இக்குடிசைகள் தாழ்ந்த கூரையைக் கொண்டதாக இருந்தன. கூரைகளில் தூண்டில் கம்புகள் செருகி வைக்கப்பட்டிருந்தன. வீட்டின் முற்றத்தில் மீன் பிடிக்க உதவும் வலைகள் காய வைக்கப்பட்டிருந்தான. இதனை, “நெடுந் தூண்டிலிற் காழ் சேர்த்திய குறுங் கூரைக் குடி நாப்ப ணில வடைந்த விருள் போல வலை யுணங்கு மணன் முன்றில்” (பட்டினப்.80-83) எனக் கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகின்றார். நெய்தல் நிலத்தவர் கடலுக்கு அருகிலேயே குடிசை அல்லது கூடாரம் அமைத்துக் குடியிருக்கும் வழக்கம் இன்றும் உள்ளது. இவ்வாறான குடியிருப்புப் பகுதிகளை குப்பம், பாக்கம் என்ற பெயரிட்டு அழைக்கின்றனர். மீனவர்களின் வீடுகளில் மீன் பிடி சாதனங்கள் அங்குமிங்குமாகக் காணப்படும். குடியிருப்பின் முன் பகுதியில் உப்பிட்டுக் கருவாடு காயவைக்கும் வழக்கமும் உண்டு. கடல் சீற்றம் போன்ற பேரிடர்களில் அதிகம் பாதிக்கக் கூடியவர்கள் மீனவர்களே என்பது குறிப்பிடத்தக்கதாகும். பாலை நிலத்தவர் குடியிருப்பு பாலை நிலம் என்பது மணலும் மணல் சார்ந்த பகுதியாகும். இங்கு உணவு தானியங்கள் விளைவிக்க முடியாது. நீர்நிலைகள் இல்லாததால் வெற்றிடப் பகுதி இது எனலாம். பாலை நிலத்தின் தோற்றத்தினை, “முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் பாலை என்பதோர் படிவங் கொள்ளும்” (சிலம்பு.11:64-66) என்று இளங்கோவடிகள் விளக்கியுள்ளார். இங்கு, முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் மழையின்றி வறட்சியடைந்து காணப்படும் சூழலில் உருவானதே பாலை என்ற நிலமாகும். அங்கு வெயில் அதிகமாக இருக்கும். குடிநீர் இல்லாததால் தாகம் மிகுந்து காணப்படும். உணவுக்கான விளைச்சல் இல்லாமையால் பாலை நில மக்களுள் சிலர் விலங்குகள், பறவைகள் முதலியவற்றை வேட்டையாடுவதோடு, களவுத் தொழிலையும் செய்தனர். இவர்களது குடியிருப்புகள் சிறிய குடிசைகளாக இருந்தது. வெயில் அதிகமான காலங்களில் அங்குல்லோர் மிகவும் துன்புற்றனர் என்பதை, “உரறுவெயிற் உலைஇய உருபு அவர் குரம்பை” (சிறுபாண்.174) என்ற அடியின் மூலம் அறியமுடிக்கிறது. இங்கு வாழும் மக்கள் மறவர், எயினர் எனப்படுவார். இவர்கள் வாழ்ந்த ஊர் ‘குறும்பு’ என்பதாகும். இதனை, “கடுங்கண் மறவர் கல்கெழு குறும்பின்” (அகம்.87) என்ற பாடல் அடியால் அறியமுடிகிறது. இக் குறும்பு எனும் ஊர் கற்கள் நிரம்பிய பகுதியில் அமைந்துரிந்தது இதன் வழி உணரமுடிகிறது. மேலும், எயினர் வீடுகளில் சங்கிலியால் நாய் கட்டப்பட்டிருக்கும். அதனால் வேறு யாரும் அங்குப் புக முடியாது. வீட்டைச் சுற்றி முள்வேலியும் அதனைச் சூழ்ந்து காவற் காடும் இருந்தன என்பதை, “தொடர்நா யாத்த துன்னருங் கடிநகர் வாழ்முள் வேலிச் சூழ்மிளைப் படப்பை” (பெரும்பாண்.125-126) என்னும் அடிகள் வெளிப்படுத்துகின்றன. முடிவுரை பல்லாற்றானும் உழைத்துக் கலைத்த மனித உடல், சற்றே ஓய்வு கொள்ள சிறு குடிசை தேவைப்பட்டிருக்க வேண்டும். அதுபோல தான் சேகரித்த உணவு தானியங்களை மழை, வெயில், பிற உயிரினங்கள் போன்றவற்றிடம் இருந்து பத்திரப்படுத்த ஒரு இடம் வேண்டும் என்பதை உணர்ந்த காரணத்தாலே குடியிருப்புகள் உருவாகியிருப்பது தெரிகிறது. கூடி வாழ்வதையும் உறவோடு இன்புறுவதையும் விரும்பிய தமிழர்கள் பண்பட்டக் குடியிருப்புகளை அவர்கள் செய்யும் தொழிலுக்கு ஏற்பவும் தொழில் செய்யும் இடத்தருகேயும் அமைத்துக் கொண்டு மகிழ்வுடன் வாழ்ந்தனர் என்பதை இதுகாறும் கண்ட சான்றுகளால் அறியமுடிக்கின்றது. துணைநூற் பட்டியல் : வே.சாமிநாதையர் (ப.ஆ), பத்துப்பாட்டு மூலமும் நாச்சினார்க்கினியாருரையும். கார்திகே சு.சிவத்தம்பி , பண்டைத் தமிழ்ச் சமுகம். ஞா.தேவநேயப்பாவாணர், தமிழர் வரலாற்று பகுதி – 2. வாழ்வியல் களஞ்சியம் தொகுதி 11, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்.

உங்களுக்கு விரும்பிய தலைப்புகள்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியா என்றால் ஏதாவது கனமாகத் தான் எழுத வேண்டும் என்று சிலர் எண்ணக்கூடும். சில தகவல்களுக்கு நாம் கூடிய கவனம் எடுத்து தொகுக்க முனைவது உண்மை. அதற்காகத் தலைப்புகள் எல்லாம் கனமாக இருக்க வேண்டியதில்லை.

உங்களுக்கு விருப்பமான நூல்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், உணவுகள், உடைகள், இடங்கள், சுற்றுலா ஈர்ப்புகள், நபர்கள், விளையாட்டுக்கள், புதிர்கள், கருத்துருக்கள் மற்று பல விடயங்கள் பற்றி நீங்கள் கட்டுரைகள் எழுதலாம்.

குறுங்கட்டுரையாக்கம்[தொகு]

தமிழ் விக்கிப்பீடியாவில் பல முக்கிய தலைப்புகளில் ஆழமாகக் கட்டுரைகள் எழுதப்படவேண்டும். பல துறைகள் அகலமாக அலசப்படவேண்டும். இரண்டுக்கும் ஒரு தொடக்கமாகக் குறுங்கட்டுரைகள் அமைகின்றன.

ஒரு குறுங்கட்டுரை என்பது ஒரு தலைப்பில் குறைந்தது 3 வசனங்கள் எழுதுவதாகும். விக்கி இடை இணைப்புகள், விக்கி உள் இணைப்புகள், வெளி இணைப்புகள், படங்கள் ஆகியவை இணைத்து குறுங்கட்டுரையை மேம்படுத்தலாம். விக்கி இடை இணைப்பு என்பது தமிழ் விக்கி தலைப்புக்கும் பிற மொழி தலைப்புகளுக்கும் இடது பக்கத்தில் தரப்படும் இணைப்பு ஆகும். இந்த இணைப்பு ஊடாக பிற பயனர் ஆங்கில விக்கிகோ பிற மொழி விக்கிகளுக்கோ சென்று மேலும் தகவல்களைப் பெற்று கட்டுரையை விரிபுபடுத்தலாம்.

விக்கி உள் இணைப்பு என்பது தமிழ் விக்கியிலேயே இருக்கும் கட்டுரைகளுக்கு இணைப்புத் தருதல் ஆகும். இது சொல்ல வந்தத் தலைப்பில் இருந்து விலகாமல், ஆனால் பயனர்களுக்கு மேலும் விளக்கங்கள் தேவைப்படக்கூடிய தலைப்புகளுக்கு இணைப்பு தருவதாகும். இதுவே கலைச்சொற்களை இணைத்துத் தமிழில் அறிவியல் தொழில்நுட்பக் கருத்துப்புலத்தைக் கட்டமைக்க உதவுகின்றது.

வெளி இணைப்புகள் இணையத்தில் தலைப்பு தொடர்பாக இருக்கும் கட்டுரைகளுக்கான இணைப்புகள். சிறப்பாக தமிழ்க் கட்டுரைகளைத் தேடி இணைத்தால் பயனர்களுக்குப் பயன் மிகும். தகுந்த ஒளிப்படம், விளக்கப்படம் ஆகியவற்றை இணைத்தால் கட்டுரையைப் படிக்க ஆர்வத்தைத் தூண்டும். ஒலி, நிகழ்பட கோப்புக்களும் இருந்தால் இணைக்கலாம். விக்கி நுட்பங்கள் பழக்கமானவுடன் வார்ப்புருக்களைப் (Template) பயன்படுத்தி, தகவல்களை சுருக்கமாகத் தரலாம். பட்டியல், அட்டவணை முறைகளிலும் தகவல்களைப் பகிரலாம். இறுதியாக தகுந்த பகுப்புகளுக்குள் (வகைக்குள்) அந்தக் கட்டுரையை இடவேண்டும். விக்கி பக்கத்தில் எ.கா பகுப்பு:அறிவியல் என்று சேர்ப்பதன் மூலம் அந்த பகுப்புக்குள் இடலாம்.

எல்லாவற்றையும் நீங்களே செய்ய வேண்டும் என்றில்லை. மூன்று வசனங்களை இட்டால் பிற பயனர்கள் வந்து மேம்படுத்துவர். அல்லது நீங்கள் இவ்வாறு ஆக்கப்பட்ட குறுங்கட்டுரைகளை மேம்படுத்தலாம். எனவே இங்கே எழுத்து திறமை என்பதிலும் பார்க்க ஆர்வமும், ஓரளவு விக்கி நுட்பமும் தான் வேண்டும். மாணவர், துறைசாரார், எழுத்தாளர்கள். வலைப்பதிவர்கள், தமிழ் ஆர்வலர்கள், அறிஞர்கள் என எல்லோரும் தமிழ் விக்கியில் குறுங்கட்டுரைகள் ஆக்க முன்வரவேண்டும்.

கதை திரைக்கதை வசனம் இயக்கம் விமர்சனம் அமைப்பு அமைப்பியல் மற்றும் தயாரிப்பு பொறுப்பு சட்டம் நிதி ஆலோசனை சேவைகள் நிதி மற்றும் வங்கிகள் மருத்துவம் உதவியில் வாழும் வாழ்க்கை உளவியல் நிபுணர்கள் மற்றும் உளவியல் ஊட்டச்சத்து கல்லறைகள் மற்றும் தகனம் கால்நடை மருத்துவர்கள் மற்றும் கால்நடை மருத்துவமனை குடும்ப நல உத்தியோகத்தர்கள் கேட்டல் சிறுநீரக மருத்துவர்கள் சுகாதாரம் உள்ளே கொழும்பு மற்றும் பல பக்க விருப்பங்கள் தயாரிப்பு கட்டடம் கட்டிடங்கள் ங மற்றும் பல பக்கம் ஒரு சில நேரங்களில் சில மனிதர்கள் வாழும் மக்கள் பெரும்பாலும் ஒரு ஒற்றை மற்றும் பல பக்கம் தளத்தில் தயாரிப்பு உலோக ங மற்றும் தயாரிப்பு கட்டடம் கட்டிடங்கள் கட்டுமானப்பணி எந்திரங்கள் தொழில்நுட்ப கட்டமைப்பு ஒரு ஒற்றை தயாரிப்பு பக்கம் தளத்தில் தயாரிப்பு ஓவியம் மற்றும்

மொழிபெயர்ப்பு[தொகு]

விக்கியாக்கம்[தொகு]

மேற்கோள் சேர்த்தல்[தொகு]

வகைப்படித்தல்[தொகு]

இன்றைப்படுத்தல்[தொகு]

நிர்வாகம்[தொகு]

அறிமுகப்படுத்தல், தொடர்பாடல்[தொகு]

நிரலாக்கம்[தொகு]

வரைகலை[தொகு]

படம் சேர்த்தல்[தொகு]

கருத்து பகிர்வு[தொகு]

மெய்பார்த்தல்[தொகு]