பூனைக்குடும்ப விலங்குகள்/வாருங்கள் பூனைக்குடும்ப உறுப்பினர்களை சந்திப்போம்

விக்கிநூல்கள் இலிருந்து
ஒரு ஆப்பிரிக்க பெண்சிங்கம் அதன் எல்லைகளை சுற்றிப்பார்க்கும் தருணம்

ஹி இன்ச்சி நா யா நானி ? நி யங்கு, யங்கு, யங்கு!(யாருடைய நிலம் இது ?இது என்னுடையது, என்னுடையது, என்னுடையது!) என்று ஆண் சிங்கம் கர்ச்சிப்பதாக ஆப்பிரிக்க மக்களிடையே பேச்சு உள்ளது.காடுகளில் கூடாரம் அமைத்து தங்கினாலேயே இது உண்மையா என்று பார்க்கலாம். இந்த கர்ச்சனையின் பின்னால் என்னதான் உள்ளது ?உண்மையில் ,ஒரு விதத்தில் நாம் எல்லாஇடமும் பார்க்கும் பூனைக்குடும்ப விலங்குகளும் ஒரேமாதிரியானவைதான்.உங்கள் வீட்டுப்பூனை ஒரு அணிலை துரத்துவதை பார்க்கும் போது அதனூடாக ரண்தம்போர் தேசிய பூங்காவிலுள்ள புலியொன்று மானை துரத்தும் காட்சியின் ஒரு சிறுமைப்படுத்தப்படட வடிவத்தையே காண்கிறீர்கள் .

சிறந்த இரைக்கௌவி[தொகு]

புலிகளும்,சிங்கங்களும் இயற்கையின் பிரம்மாண்ட இரைகௌவிகளினுள் அடங்கும் .கொடுங்கரடி ஒன்று சைபீரியப் புலியொன்றை விட பருமனில் பெரிது எனினும் சைபீரியப் புலி கொடுங்கரடியை விட அதிக வேகமானது.ஓநாய் ஒன்று ஜாகுவாறொன்றை விட மோப்ப சக்தி அதிகமானது எனினும் ஜாகுவாரை போல பெரிய இரைகளை தனியாக வேட்டையாடாமல் கூட்டங்களாகவே வேடடையாடுகின்றன.நாய்கள் சமனான வலிமையுடைய பூனைக்குடும்ப விலங்குகளுடன்(வீட்டு பூனைகள் முதல் எல்லா இனங்களும் அடங்கும் ஆனால் ஜாகுவார்கள்,சிங்கங்கள் ,புலிகள் அடங்காது) போட்டிபோடுகின்றன;ஆனால் நாய்களிடம் பெரிய பற்களோ தாடைகளோ இல்லை; தமது வாழ்விற்காக மனிதர்களிடம் உணவு பெறவேண்டியுள்ளது ;மனிதர்களுடன் இணைந்து வேட்டையாடாதவிடத்து தமது வேட்டையாடும் திறனை அரிதாகவே வெளிப்படுத்துகின்றன. ஆனால் பூனைக்குடும்ப விலங்குகள் இரவுநேரத்தில் தெளிவான பார்வையையும் ,கூர்மையான கேட்க்கும் திறனையும் அசாதாரண உடற்வலிமையையும் கொண்டுள்ளன.அவை இரையை மெதுவாக பின்தொடர்ந்து வேட் டையாடி உண்கின்றன. அவற்றின் உரோமத்திலுள்ள உருமறைப்புத்தன்மையும் ,விரைவான உடலசைவுகளும் இரைகள் அவற்றை இனங்கான்பதை கடினமாக்குகின்றது.

ஒவ்வொரு வேலைக்கும் பூனைகுடும்பத்தில் விலங்குகள் உள்ளன. அந்தாட்டிக்காவைத் தவிர ஒவ்வொரு கண்டத்திலும் பூனைகுடும்பத்திலிருந்து ராஜா உள்ளது. ஆப்பிரிக்கா சிங்கத்தால் ஆளப்படுகிறது, ஆசியா புலியால் ஆளப்படுகிறது (இமயமலை புலிகளுக்கு மிகவும் உயரமாக இருந்தாலும்; அங்கு பனிச்சிறுத்தை ராஜாவாக உள்ளது.) தெற்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் மன்னர் நிச்சயமாக ஜாகுவார். வட அமெரிக்கா மலைசிங்த்தின் களமாகும். ஆத்திரேலியாவில் பெரிய பூனை இனங்கள் இல்லை, ஆனால் அதில் பல சிறிய பூனை இனங்கள் உள்ளன, அவை அடக்கமான பூனை இனங்களிலிருந்து வந்தவை, ஆனால் பின்னர் அவர்களின் ராட்சத உறவினர்களைப் போலவே காட்டுத்தனமாக மாறிவிட்டன. இந்த பூனை இனங்கள் நீங்கள் சந்தித்த செல்லப் பூனைகளைப் போலவே இருந்தாலும், அவை தீவிரமான வேட்டையாடும் விலங்குகளாக மாறிவிட்டன. இருப்பினும், அவற்றில் சில, பெரும்பாலான வீட்டுப் பூனைகளை விட மிகப் பெரியவை, அவை பூமாக்கள் போன்ற பெரிய இனங்கள் என்று தவறாகக் கருதப்படுகின்றன.

இயற்கையின் சமநிலை கச்சிதமாக பேணப்படுகின்றது .பெரிய இரைகௌவிகள் சிறிய எண்ணிக்கையிலேயே உள்ளன.அடுத்தாக நடுத்தர அளவு பூனை இனங்கள் நடுத்தர இரைகளை (முயல் முதல் மான் மற்றும் மறிமான் முதலியன )வேட்டையாடி உயிர் வாழ்கின்றன.அதிகளவிலுள்ள சிறிய பூனை இனங்கள் (வீட்டுப்பூனைகளும் ) பல்லி,பூச்சி ,கொறிணி , பறவை போன்ற சிறிய இரைகளை வேட்டையாடி வாழ்கின்றன. இவ்விதம் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இரையை தேர்ந்தெடுப்பதன் மூலம் தம்மிடையான போட்டியை தவிர்த்து இயற்கை சமநிலைக்கு உதவுகின்றன. நுகர்வோர் இசைத்தட்டுகளை வாங்குவதற்கு போட்டிபோடுவதை போல பல்பொருள் அங்காடிகளில் போட்டிபோடுவதில்லை.காரணம் விதவிதமான வகைகளில் பொருட்கள் தேவைக்கேற்ப அங்காடிகளில் இருப்பதே ஆகும்.இதைப்போலவே இயற்கையும், பற்பல பூண்டுகளையும் செடி கொடிகளையும் ,அதையுண்ணும் பல்வேறு மிருக இனங்களையும் ,குறித்த இனங்களை வேட்டையாடும் பல்வேறுபட்ட இரைகௌவிகளையும் பேணுவதன் மூலம் இயற்கைச்சமநிலையை பேணுகின்றது.வயலில் வாழும் எலிகள் காட்டுப்பூனைகளுக்குக்கு உணவாகின்றன , வயல் எலிகளை புலியோ வேட்டையாடி உண்பதில்லை.அவ்வாறே சிறிய மறிமான்களை சிவிங்கிப்புலியும் பலமான காட்டுஎருமைகளை பலமான சிங்கங்களும் வேட்டையாடுகின்றன.

மாமிச உண்ணிகள்[தொகு]

பூனையினங்கள் வேட்டையாடுவதன் மூலம் உயிர் வாழ்வதற்கான மாமிசத்தை பெறுகின்றன.புல் மற்றும் இலைகளை உண்ணும் விலங்குகள் தனித்துவமான வயிற்றுப்பகுதியை கொண்டுள்ளன . அவற்றின் வயிற்றில் உள்ள பக்றீரியாக்களின் உதவியுடன் சிக்கலான தாவர சக்கரைட்டுகளை எளிய சக்கரைட்டுகளாக மாற்றி செரிமானம் செய்கின்றன.பூனையினங்கள் குறுகிய சமிபாட்டு தொகுதியையே கொண்டுள்ளன .அவற்றை பயன்படுத்தி மாமிசத்தை சாமிபாடடைய செய்வதன் மூலம் இயங்குவதற்கான சக்தியை பெறுகின்றன . அவற்றின் உடலை கட்டமைக்கும் மூலக்கூறுகளையும் அதனூடாகவே பெறுகின்றன .பூனையினங்களால் புல்லை உட்க்கொண்டு வாழ முடியாது.அதனால் அவை தாவரஉண்ணிகளை வேட்டையாடி உண்ணுகின்றன .இவ்விதம் உணவு சங்கிலி அமையப்பெற்றுள்ளது .

புத்திக்கூர்மை[தொகு]

பூமியில் உள்ள மிகவும் அறிவார்ந்த விலங்குகளில் பூனையினங்களும் அடங்கும்.இவை அறிவு வரிசையில் முதனிகள் (குரங்கு, மனித குரங்கு ),கடற்பாலூட்டிகள் (திமிங்கிலம், ஓங்கில்),யானைகள் ,பன்றிகள் மற்றும் துடுப்புக்காலிகளை விட சிறிதே பின்தங்கியுள்ளன .எல்லா பூனையினங்களும் விரைவில் கற்பதுடன் அதிக ஆர்வத்தையும் வெளிக்காட்டும்.சிறந்த வேட்டையாடிகளாக இருக்க மேலதிக புத்திசாலித்தனம் பெரிய இரைகௌவிகளுக்கு தேவைப்படுகின்றது .மேலும் தாய் விலங்குகள் குட்டிகளுக்கு உயிர் பிழைப்பதற்க்கான பெரும்பாலான விடயங்களை நீண்டகாலத்துக்கு (ஒன்று முதல் இரண்டு வருடங்கள் ) கற்பிக்கும் . தாம் வாழப்போகும் சூழலை எவ்விதம் எதிர்கொள்வதென்பதை கற்கும் பள்ளிப்பருவமாக இதை கருதலாம் .

எல்லா இடங்களிலும் காணப்பட்ட போதிலும் எங்கும் பாதுகாப்பு இல்லாமலேயே உள்ளன[தொகு]

ஆத்திரேலியா,அந்தாட்டிக்காவை தவிர்ந்த எல்லாக்கண்டங்களிலும் அக்கண்டங்களை இயற்கை பிறப்பிடமாக கொண்ட பூனையின விலங்குகள் வாழ்கின்றன.ஆத்திரேலியாவில் சிறிய ரக வீட்டுபூனைகளும் அவற்றின் காட்டுதனமாக மாறிய பூனைகளின் சந்ததிகளும் மட்டுமே உள்ளது.இந்த சிறிய காட்டுத்தனமான பூனைகள் சிறிய இரைகளை கச்சிதமாக, பெரிய பூனையினங்களை போலவே வேட் டையாடுகின்றன.துரதிட்ட வசமாக ,பெரும்பாலான பூனையினங்கள் அழிந்துவிட்டன அல்லது அழிந்துகொண்டிருக்கின்றன .(உலகில் 7000 லட்சம் வீட்டுபூனைகளும் அவற்றின் காட்டுத்தனமான சந்ததிகளும் வாழ்கின்றன .அண்ணளவாக ஒவ்வொரு பத்து மனிதர்களுக்கும் ஒரு பூனையென்ற வீதத்தில் உள்ளன.இவை அழிவடையக்கூடிய ஆபத்து இல்லை ) காட்டுப்பூனையினங்கள் அவற்றின் உரோமம் மற்றும் இறைச்சிக்காக அடிக்கடி வேட்டையாடப்படுகின்றன . ஆசியாவில் ஒவ்வருவருடமும் ஆயிரக்கணக்கான புலிகள் அவற்றின் உடல் பகுதிகளுக்காக வேட் டையாடப்படுகின்றன.பூனையினங்கள் வேட்டையாடிய இரைகளை அபகரிக்கும் நோக்கிலும் மனிதர்கள் பூனையினங்களை வேட்டையாடுகின்றனர்.இன்னும் சிலர் விளையாட்டுக்காக அவற்றை வேட்டையாடுகின்றனர் .மேலும் கொடுமையானது என்னவெனில் அவற்றின் வாழும் சுற்றுச்சூழலும் ஒழுங்காக பேணப்படாமல் கெடுதிக்கு உள்ளாக்கப்படுகின்றது.

அதிட்டவசமாக பெரும்பாலான மனிதர்கள் பூனையினங்களை நண்பர்களாக ஆதரிப்பதுடன், எதிரிகளாக கருதி அழிக்கும் மனப்பாங்கு இல்லாமல் செயற்படுகின்றனர் .இந்த சிறந்த பூனையினங்களை பற்றியும் அவற்றின் உலகத்தையும் பற்றியும் அதிகம் கற்றுக்கொள்வதுடன், கற்றதை உங்கள் குடும்பத்துடனும் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள் .ஒன்றை அதிகளவில் புரிந்துகொள்ளும் போதே அதன் மதிப்பை அதிகளவில் உணர முடியும் .சிறிய மற்றும் பெரிய விலைமதிப்பில்லாத பூனையினங்களை அழியாது பாதுகாப்பது அவசியமாகும் .இந்த சிறந்த இரைக்கௌவிகளை,எமது பிள்ளைகளும் பேரப்பிள்ளைகளும் வாழும் காலத்திலும் அழியாது காக்க, ஏனைய உயிரினங்களுடனும் இந்த மட்டுப்படுத்தப்பட்ட பூமியின் வளங்களை பகிருவதற்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டும் .

அடுத்த தலைப்பு : சிங்கம்